Tuesday, March 2, 2010

என் முதல் கவிதை இமைகள்

உன்மையில் நீ என் இமைகள்
ஒரு வினாடிக்கு ஒரு முறை வந்து செல்கிராய்

நான் விழித்திருந்தாலும் , உரங்கினாலும்
என் பின்பம் நீ தான்

கண் மூடவும் மனமில்லை கண் திறந்தால்
நீ இல்லை அன்பே!

Wednesday, February 24, 2010

இதுதான் 60ஆ‌ம் க‌ல்யாண‌த்‌தி‌ன் அ‌ர்‌த்த‌ம்!

ஒருவரு‌க்கு 60ஆவது ‌பிற‌ந்த நா‌ள் வரு‌ம் போது, அவரு‌க்கு 60ஆ‌ம் க‌ல்யாண‌ம் செ‌ய்து வை‌க்‌கிறா‌ர்க‌ள் அவ‌ர்களது ‌பி‌ள்ளைக‌ள். பெ‌ற்றவ‌ர்க‌ள் த‌ங்களது ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் செ‌ய்து வை‌‌ப்பது போக, ‌பி‌ள்ளைக‌ள் பெ‌ற்றவ‌ர்களு‌க்கு செ‌ய்வதுதா‌ன் 60ஆ‌ம் க‌ல்யாண‌த்‌தி‌ன் ‌சிற‌ப்பாகு‌ம்.

ஆனா‌ல் பலரு‌க்கு‌ம் 60ஆ‌ம் ‌பிற‌ந்த நா‌ள் ம‌ட்டு‌ம் அ‌வ்வளவு ‌சிற‌ப்பு ஏ‌ன், அ‌ந்த ஆ‌ண்டி‌ல் ம‌ட்டு‌ம் ‌‌மீ‌ண்டு‌ம் ‌திருமண‌ம் அதாவது 60ஆ‌ம் க‌ல்யாண‌ம் செ‌ய்து வை‌ப்பது எத‌ற்கு எ‌ன்று தெ‌ரிவ‌தி‌ல்லை.

அதாவது இத‌ற்கு ஆ‌ன்‌மீக அ‌ர்‌த்த‌ம் உ‌ள்ளது எ‌ன்பதை முத‌லி‌ல் அ‌றிய வே‌ண்டு‌ம்.

ஒருவருக்கு 60 வயது முடிந்து, 61-வது வயது தொடங்கும் ஜென்ம நட்சத்திர நாளன்று, அவர் பிறந்தபோது ஜாதகத்தில் நவகிரகங்கள் எந்த நிலையில் இருந்தனவோ அதே இடத்தில் மறுபடியும் அமைந்திருக்கும்.

அப்போது ஆயுளில் ஒரு பாகம் முடிந்து மறு பாகம் ஆரம்பி‌க்‌கிறது எ‌ன்று பொரு‌ள். அன்று முதல் அவர் புதுப்பிறவி எடுப்பதாக கருதலாம். ஒரு ஆயுளை அவ‌ர் முடி‌த்து‌வி‌ட்டா‌ர் எ‌ன்று‌ம் கருதலா‌ம். அதனால்தான், அப்போது திரும்பவும் திருமணம் செய்து வை‌ப்பா‌ர்க‌ள். இதை 60-ம் கல்யாணம் என்றும், சஷ்டியப்தபூர்த்தி என்றும் அழைக்கிறார்கள்.

இ‌னி யாராவது.. உன‌க்கு ‌திருமணமே நட‌க்க‌வி‌ல்லையா? நேரா 60ஆ‌ம் க‌ல்யாண‌ம்தா‌ன் எ‌ன்று சொ‌ன்னா‌ல்.. அ‌ப்போது குறு‌க்‌கி‌ட்டு 60ஆ‌ம் க‌ல்யாண‌த்‌தி‌ன் அ‌ர்‌த்த‌ம் எ‌ன்ன எ‌ன்பதை ‌விள‌க்‌கி‌க் கூறு‌ங்க‌ள்.

Monday, February 22, 2010

மிக‌ச் ச‌ரியான யு‌க்‌தியை க‌ண்ட‌‌றிவது அவ‌சிய‌ம்

ஒரு ‌கிராம‌த்‌தி‌ல் ஒரு பண்ணையார் வாழ்ந்திருந்தார். அவ‌ர் ச‌மீப‌த்‌தி‌ல் ப‌ல ஆ‌யிர‌ங்க‌ள் கொடு‌த்து ஒரு கு‌திரையை வா‌ங்‌கி‌யிரு‌ந்தா‌ர். அதனை ப‌ண்ணையாரு‌க்கு ஏ‌ற்ற வகை‌யி‌ல் பழ‌க்க‌ப்படு‌த்த ‌சில ஆ‌ட்களையு‌ம் ‌நிய‌மி‌த்‌திரு‌ந்தா‌ர்.

புது இடத்துக்கு வந்ததாலோ என்னவோ அந்தக் குதிரை ‌மிகவு‌ம் ‌பய‌ந்துபோ‌யிரு‌ந்தது. ‌தினமும் காலையில் அதை, தன் வீட்டிற்குமுன் இருக்கும் புல்வெளிக்கு அழைத்துவரச் செய்வார் பண்ணையார்.

பிறகு, தன் வேலையாட்களைவிட்டு அதன் மீது ஏறி, சுற்றிவரச் சொல்வார். ஆனால் அவர்கள் யார் தன்னருகே வந்தாலும் குதிரை பெரிதாக கனைத்து, இரு முன்னங்கால்களையும் உயர்த்தி அவர்களை விரட்டிவிடும்.

அ‌ந்த ‌கிராம‌த்‌தி‌‌ற்கு சூஃ‌பி ஞானி வ‌ந்தா‌ர். அவ‌ர் வந்திருப்பதை அறிந்ததும், அவரைச் சென்று பார்த்தார் பண்ணையார். தா‌ன் வா‌ங்‌கிய கு‌திரை ‌மிர‌ண்டிரு‌ப்பதா‌ல் ஏ‌ற்ப‌ட்ட மனவருத்தத்தைக் கூறி, அதைத் தீர்த்து வைக்குமாறு ஞானியிடம் கேட்டுக்கொண்டார். ஞானி ஒருநாள் காலையில் பண்ணையார் வீட்டிற்குச் சென்றார்.

சூஃ‌‌பி ஞா‌னி முன்பு அந்த குதிரை கொ‌ண்டு வரப்பட்டது. மிகவும் உயர்ஜாதியைச் சேர்ந்த குதிரை அது எ‌ன்பதை சூஃ‌பி ஞா‌னி க‌ண்டு கொ‌ண்டா‌ர். ஒருமுறைப் பழக்கினாலே பளிச்சென்று பிடித்துக்கொண்டுவிடும் புத்திசாலியாகவும் அ‌ந்த கு‌திரை தோன்றியது. வேலையாள் ஒருவர் அதன்மீது தாவி ஏற முற்பட்டார். அது அவருக்கும் மேலாகத் துள்ளி அவரைத் தள்ளிவிட்டது.

அதைப் பார்த்த ஞானி வேலையாட்களிடம் அந்தக் குதிரையை கிழக்கு பார்த்தபடி நிறுத்திவைக்கச் சொன்னார். பிறகு அதனிடம் சென்று பரிவாகத் தடவிக் கொடுக்கச் சொன்னார். அதற்குப் பிடித்த தீவனத்தை அளிக்கச் சொன்னார். பிறகு அதன்மீது தாவி அமரச் சொன்னார். அதேபோல செய்தபோது குதிரை சிறிதும் முரண்டு பிடிக்கவில்லை.

தடவிக் கொடுக்கும் அன்பிலும், உணவு உட்கொண்டதால் பசி தீர்ந்த திருப்தியிலும் மட்டும் அது சமாதானமாகிவிடவில்லை. இன்னொரு முக்கிய காரணத்துக்காகத்தான் அது சாந்தமாயிற்று.

என்ன அது? குதிரையேற்றம் பழகிக்கொள்ளாத அந்த குதிரை, காலை வேளையில் தனக்குப் பின்னால் ஒளிரும் சூரிய ஒளியில் தன் நிழலும், தன்மீது ஏற முயல்பவரின் நிழலும் விழுவதைப் பார்த்து பயந்து விட்டிருந்தது. அதை ஞானி, கிழக்கு நோக்கி நிற்க வைத்தார். இப்போது அதன் நிழல் அதற்குப் பின்னால் விழவே, அதற்கு அந்த பயம் ஏற்படவில்லை; சமாதானமாகிவிட்டது.

Followers