Saturday, June 6, 2009

சிம்புவை காதலிக்கிறேனா?-த்ரிஷா


கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் சிம்புவுடன் தீவிரமாக லவ்வுவதாக த்ரிஷா குறித்து வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அலை படத்துக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கும் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படத்தில்தான் இந்த லவ் ரொம்ப ஸ்ட்ராங்காகிவிட்டதாக சில பத்திரிகைகளில் 'பிட்' ஓடிக் கொண்டிருக்கிறது!

இதுகுறித்து த்ரிஷாவிடம் கேட்டபோது, "இந்த மாதிரி வதந்திகள் இப்ப எனக்கு பழகிப் போச்சு. ஏன்னா... நான் இன்டஸ்ட்ரிக்கு வந்து 7 வருஷம் ஆகுது. இனிமேலும் இப்படிப்பட்ட செய்திகள் வரலேன்னாதான் ஆச்சரியம்.

அதைப் பத்தி நான் கவலைப் படறதே இல்லை. ஆமா... இல்லன்னு ஒரு வார்த்தையில பதில் சொல்லக் கூட எனக்குப் பிடிக்கல", எனும் த்ரிஷா தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்துவதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அது ஏன் தெலுங்கில் மட்டும் ஸ்பெஷல் அக்கறை?

தெலுங்கில் நான்தான் ராணி மாதிரி. அந்த அளவு மரியைதையோட என்னை நடத்துறாங்க. எனனோட சமீபத்திய படம் [^] கிங் பெரிய ஹிட் அங்கே. அதனால் தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்துவதை விரும்புகிறேன்.

அதுக்காக தமிழைப் புறக்கணிக்கலை. இங்கும் வித்தியாசமான வேடங்களைச் செய்ய விரும்புகிறேன், எனும் த்ரிஷாவுக்கு சென்னையில் மட்டும் 1000 ரசிகர் மன்றங்கள் உள்ளனவாம்!

இதில் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் நற்பணிகளைச் செய்ய வேண்டும் என்று அன்புக் கட்டளை போட்டிருக்கிறாராம்.

அது சரி... 'தெலுங்கு ராணி' சொன்னா சென்னை [^] ரசிகர்கள் [^] செய்துதானே ஆகணும்!

தயாரிப்பாளர்கள் நிலை: வி.சி.குகநாதன் கவலை


இப்போதெல்லாம் நடிகர் நடிகைகளைப் பார்த்து தயாரிப்பாளர்கள் எழுந்து நிற்கும்படியாகிவிட்டது. இந்த நிலை மாற வேண்டும். தமிழ் திரைப்பட நடிகர்கள் தயாரிப்பாளர்களை மதிக்க வேண்டும் என்றார் பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன்.

புதுமுகங்கள் சந்தீப்-தாமரை நடித்த சித்திரப் பூவே படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை 'பிலிம்சேம்பர்' தியேட்டரில் நேற்று நடந்தது. தென்னிந்திய திரைப்ப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்ஸி) தலைவர் வி.சி.குகநாதன் பாடல்களை வெளியிட்டார். விழாவில் அவர் பேசியதாவது:

"நடிகர்-நடிகைகள், தயாரிப்பாளர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் காலத்தில் தயாரிப்பாளர்கள் வந்தால், நடிகர்-நடிகைகள் முதல் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் எழுந்து நிற்போம்.

அது, இப்போது அப்படியே உல்ட்டாவிகிவிட்டது. நடிகர்-நடிகைகளை பார்த்து தயாரிப்பாளர்கள் எழுந்து நிற்கிறார்கள். இந்த பரிதாப நிலை மாற வேண்டும்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் புதியவர்தான். அவர் இந்த அரங்கத்துக்குள் வந்தபோதே, படத்தில் நடித்துள்ள நடிகர்-நடிகைகள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள். அதைப் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருந்தது. பழைய காலம் திரும்பி விட்டது போன்று உணர்ந்தேன். மற்ற நடிகர்-நடிகைகளும் இதை பின்பற்ற வேண்டும்," என்றார்.

வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன், 'கில்டு' தலைவர் ஜே.வி.ருக்மாங்கதன் ஆகியோரும் விழாவில் பேசினார்கள்.

படத்தின் தயாரிப்பாளர் எம்.பெரியசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இயக்குநர் ரா.கலைமுருகன் நன்றி கூறினார். பிஆர்ஓ சங்கத் தலைவர் விஜயமுரளி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

'வேண்டாம் ஆஸ்திரேலியா!' : பாலிவுட்


ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் [^] தாக்கப்பட்டதைக் கண்டித்து பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப்பச்சன், அமீர்கான் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தனக்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் வழங்குவதாக இருந்த டாக்டர் பட்டத்தை வேண்டாம் என அமிதாப் மறுத்தது நினைவிருக்கலாம்.

இந்தியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் இனவெறிக் கொடுமை நடப்பதாக அமீர் கான் தனது வலைப்பூவில் எழுதியதோடு இதைக் கண்டித்து இந்தியர்கள் [^] குரல் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால் சீக்கிய இனத்தவர்களைத் தவிர வேறு யாரும் இதுபற்றி பெரிதாக அக்கறை கொள்ளவில்லை. குறிப்பாக தென்மாநில மக்கள் இந்தப் பிரச்சினை குறித்து சின்ன அசைவைக் கூட காட்டவில்லை. எங்கள் இன மக்களை ஆயிரம் ஆயிரமாய் கொன்று குவிக்கப்பட்டபோது எங்கே போயிருந்தார்கள் இந்த பாலிவுட் நட்டத்திரங்கள்? என்றே சாமானிய மக்கள் முதல் பிரபலமான நட்சத்திரங்கள் வரை கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

எனவே இந்தப் பிரச்சினையை இப்போது தீவிரமாகக் கையிலெடுக்க முடிவு செய்துள்ளது பாலிவுட். ஆஸ்திரேலியாவில் நடக்கவிருந்த படப்பிடிப்புகளை ரத்து செய்ததோடு, அங்கு தங்கி பட வேலைகளைக் கவனித்து வந்த தொழில்நுட்ப குழுவினரை முழுமையாகத் திருப்பியழைக்கத் துவங்கியுள்ளனர் மும்பை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்.

இனி ஆஸ்திரேலியாவுக்கு விடுமுறைக்குக் கூட போகமாட்டேன் என அறிவித்துள்ளார் பிரபல இயக்குநர் [^] டேவிட் தவான். இந்தியர்களுக்கு முழு மரியாதை தரப்படும்வரை ஆஸ்திரேலியாவுக்கே போகமாட்டேன் என அறிவித்துள்ளார் சுபாஷ் கய். மதுர் பண்டார்கர், ரத்தன் ஜெய்ன் போன்றவர்களும் இதே கருத்தை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் இலங்கையில் தமிழர்கள் [^] குண்டுவீசிக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது இந்திய கிரிக்கெட் [^] அணியை அங்கு விளையாட அனுப்பியது இந்திய கிரிக்கெட் வாரியம். அதை ரசித்து மகிழ்ந்தவர்கள் இதே நட்சத்திரங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது!.

பிரபு தேவா-நயனதாரா ரகசிய திருமணம்!


முன்னணி நடன இயக்குநர்-நடிகர் மற்றும் இயக்குநரான பிரபுதேவாவும் நடிகை நயன்தாராவும் ஹைதராபாத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பிரபுதேவா வீட்டில் இந்தத் திருமணம் குறித்து மறுப்பு ஏதும் கூறவில்லை. ஆனால் நடிகை நயன்தாரா இந்தச் செய்தியை மறுத்துள்ளார். 'என் திருமண செய்தியை உரிய நேரம் வரும்போது நானே முறைப்படி அறிவிப்பேன். அதை ஒளிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'ஐயா' என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆன நயன்தாரா, அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகி முதல் நிலை நடிகை [^] என்ற அந்தஸ்தை பெற்றார். பின்னர் 'வல்லவன்' படத்தில் சிலம்பரசனுடன் ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. மிக மிக நெருக்கமாத இருவரும் பழகியது அனைவருக்குமே தெரிந்த ரகசியமானது.

சில காரணங்களால் சிம்புவுடனான காதல் முறிந்துவிட்டதாக நயன்தாரா அறிவித்தார்.

தன் இருப்பிடத்தை சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு மாற்றினார். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்தார். குறிப்பாக நாகார்ஜுனாவுடன். இதனால் இருவருக்கும் மிக நெருக்கமான உறவிருப்பதாக பேச்சு கிளம்பியது.

பின்னர் ஒருவழியாக மீண்டும் தமிழில் நடிக்க ஆரம்பித்தார்.

வில்லுவில் 'கவிழ்ந்(த்)த' பிரபுதேவா!...

விஜய் கதாநாயகனாக நடித்து, பிரபுதேவா டைரக்டு செய்த 'வில்லு' படத்தில் நயன்தாரா நாயகியானார்.

அந்த படப்பிடிப்பின்போது பிரபுதேவா - நயன் இடையே மிக நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒரே ஒட்டலில் தங்க ஆரம்பித்தார்கள். இதுபற்றி பரபரப்பாக செய்திகள் [^] வரத் துவங்கின.

இதுபற்றி பிரபுதேவாவிடம் நிருபர்கள் கேட்டபோது, "அது என் தனிப்பட்ட விஷயம். அதுபற்றி பேச விரும்பவில்லை" என்று கூறிவிட்டார். நயன்தாராவும் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை.

ரகசிய திருமணம்?:


இந் நிலையில் நயன்தாராவும், பிரபுதேவாவும் நேற்று ரகசிய திருமணம் செய்துகொண்டதாக, ஆந்திர திரையுலகில் பரபரப்பான தகவல் பரவியது.

இதுபற்றி பிரபுதேவா குடும்பத் தரப்பில் விசாரித்தபோது அவர்கள் மறுப்பும் சொல்லவில்லை, உறுதிப்படுத்தவும் இல்லை.

ஆனால் பிரபுதேவாவின் நண்பர்கள் இந்தத் திருமணம் நடந்தது உறுதி என்றும், பிரபுதேவாவின் குடும்பத்தினர் இதற்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.

குறிப்பாக பிரபு தேவாவின் தந்தை சுந்தரம், நயன்தாராவை பிரபுதேவா தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஆனால் முதல் மனைவியை தள்ளி வைத்துவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்க, அதை பிரபுதேவா ஒப்புக் கொண்டார் என்றும் கூறினர்.

கடந்த ஒரு மாதமாகவே நயன்தாரா-பிரபுதேவா சேர்ந்தே வசிப்பதாகவும் தெரிவித்தனர் அவர்கள்.

ஒளிக்க வேண்டிய அவசியமில்லை!

ஆனால் நயன்தாரா தரப்பில் இதுகுறித்து எதுவும் சொல்ல முடியாது என்று கோபமாகத் தெரிவித்தனர்.

நயன்தாராவோ, 'என் திருமண செய்தி [^]யை உரிய நேரம் வரும்போது நானே முறைப்படி அறிவிப்பேன். அதை ஒளிக்க வேண்டிய அவசியம் இல்லை' என தனது மேனேஜர் மூலம் செய்தி வெளியிட்டுள்ளார்.

1996ம் ஆண்டு தனது நடனக் குழுவிலிருந்த ரம்லத் என்ற பெண்ண காதலித்து திருமணம் [^] செய்து கொண்ட பிரபுதேவா, கிட்டத்தட்ட பத்தாண்டுகள் அவரை தலைமறைவாகவே வைத்திருந்தார்.

இந்தத் தம்பதிக்கு 3 குழந்தைகள். இதில் மூத்த மகன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் காலமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Friday, June 5, 2009

ஆர்யாவின் அழகப்பன் ஃபார்முலா?


தனது முதல் படமான 'அறிந்தும் அறியாமலும்' ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவுக்கு தனது தொண்டரடிப் பொடிகளுடன் வந்திருந்து ஆர்யான்னு பேர் சொல்லும்போதேல்லாம் ஆர்ப்பரிக்க வைத்து, 'ரிலீசுக்கு முன்னாடியே கலக்குறானே, யாருய்யா அது?'ன்னு கேட்க வச்சவரு ஆர்யா!

முதல் படத்திலேயே இப்படின்னா, இப்போ எப்படியிருக்கும்? சொல்லவே வேணாம். இதோ ஒரு 'அழகப்பன் ஃபார்முலா!'

அதென்ன அழகப்பன் ஃபார்முலா? ஆர்யாவை வைத்து படம் துவங்கப் போகிறார்கள் என்ற அறிவிப்பு வந்தாலே போதும். கம்பெனிக்கு டிப் டாப்பாக ஒரு ஆசாமி வருவார். 'ஐ ஆம் அழகப்பன்' என்று அறிமுகப்படுத்திப்பார். 'இந்த படத்தோட என்எஸ்சி ஏரியாவை நான் விலைக்கு வாங்கிக்கிறேன்'னு பெரிய ரேட் பேசுவார். அட, படமே ஸ்டார்ட் பண்ணலே. அதுக்குள்ளே ஒரு பெரிய ஏரியாவே சேல்ஸ் ஆவுதா? சந்தோஷத்தில் ஆர்யா சம்பளத்தை அப்படியே கொஞ்சம் ஏத்தும் கம்பெனி. சில லகரங்கள் அட்வான்சை கொடுத்திட்டு போகிற நபர், அப்புறம் கண்ணிலே தென் பட்டாதானே?

இது கூட்டு சதியா? இல்லே, அழகப்பன்ங்கறது தனி ஆளா? கொஞ்சம் விசாரிச்சாவது சொல்லுங்களேன் எங்களுக்கும்! முக்கியமான செய்தி, தன்னை மத்திய அமைச்சர் ஒருத்தரோட பினாமின்னும் சொல்லியிருக்கிறாராம் மேற்படி ஆசாமி.

ஏன் சார் இடைவெளி விட்டீங்க? ரஜினியிடம் அமீர் கேள்வி


'இவய்ங்க பண்ற அலப்பரை தாங்கலைப்பா' என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள். எல்லா படத்திலேயும் ரஜினி மாதிரி பஞ்ச் டயலாக்குகள். பாய்ச்சல்கள் என்று தனது தனி அடையாளத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய ஹீரோக்கள்.

சமீபத்தில் வந்த ஒரு படத்தை பார்த்துவிட்டு ரொம்பவே நொந்து போனராம் அமீர். ஏதாவது புதுமையா சொல்லணுமில்லையா? இதுக்கு முன்னாடி வந்த அதே காட்சிகள். அதே வசனங்கள். நடிச்சிருக்கிற ஆளுதான் வேற வேற. இதுக்கு எதுக்கு இத்தனை கோடி செலவு பண்ணணும்? வரவர தமிழ் சினிமாவின் போக்கு ரொம்ப பயம்மா இருக்கு என்றார்.

இவங்களோட ஆர்ப்பாட்டம் தாங்க முடியாத அமீர், ஒரு முறை ரஜினியை பார்க்கும் போது நேரடியாகவே கேட்டு விட்டாராம். 'சார், ஒரு ரெண்டு வருஷம் கேப் விட்டீங்க. ஆளாளுக்கு பஞ்ச் டயலாக் பேச ஆரம்பிச்சிட்டாய்ங்க. இனிமே நீங்க பஞ்ச் டயலாக் பேசினா எடுபடுமா தெரியலே, உங்க ரூட்டை மாத்திருங்க' என்றாராம். அமீரின் இன்னொரு வருத்தம், சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஆடியோ ரிலீஸ் விழா ஒன்று.

'மலையாளத்திலே இருந்து படம் எடுக்க வந்திருக்காங்க. ரொம்ப வித்தியாசமா இருக்கும்னு நெனைச்சேன். ஆனா, பாடல்களை பார்த்தா அதுவும் தமிழ்லே வர்ற மசாலா படங்களுக்கு சளைச்சதா தெரியலே. இருந்தாலும், எதை எதை பாராட்டணுமோ, அதை மட்டும் பாராட்டிட்டு வந்தேன். வேறென்ன செய்யுறது?' என்றார் வேதனையோடு.

ஞாநியின் விமர்சனமும், கமலின் பயிலரங்கமும்?

எழுத்தாளர் ஞாநி, இந்த வாரம் கமல்ஹாசனுக்கு ஆணி அறைந்து விட்டார். "ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே, திரைக்கதை, எழுத்து பயிற்சி முகாம் நடத்திய தமிழ் சினிமா நடிகர் கமல்ஹாசனுக்கு இந்த வார குட்டு" என்று குமுதம் வார இதழில் எழுதியுள்ளார் ஞாநி.

பொதுவாக எழுத்தாளர்களின் விமர்சனங்களை அதிகம் கவனிக்கும் கமல் போன்ற திரைஞானிகளுக்கு இந்த விமர்சனம் ஜீரணித்துக் கொள்ள இயலாததாகவே இருக்கும். உண்மையில் நடந்தது என்ன? இந்த பயிலரங்கத்தில் பயின்ற மாணவர் ஒருவரை கேட்டோம்.

இந்த ஸ்கிரீன் ரைட்டிங் பயிற்சியை அவர் தமிழ் பட ஆர்வலர்களுக்காக மட்டுமே நடத்தவில்லை. இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் 250 பேரை செலக்ட் செய்து பயிற்சி அளித்தார்கள். அதில் தமிழ் தெரிந்தவர்கள் மிக சிலரே. கட்டணமாக வாங்கிய 2500 ரூபாய்க்கு அதே மதிப்புள்ள பரிசுப் பொருட்களை கொடுத்ததுடன், ஐந்து நாட்கள் ஐஐடி வளாகத்திலேயே தங்கிக் கொள்ளவும், சாப்பாடு உள்ளிட்ட இதர செலவையும் அந்த பணத்திலேயே செய்து கொடுத்திருந்தார்கள்.

பயிற்சி வகுப்பு நடந்த ஐந்து நாட்களும் அங்கேயே எங்களுடன் இருந்தார் கமல். அவரது பட வேலைகளையும் விட்டு விட்டு அக்கறையோடு அவர் இருந்ததே கோடி ரூபாய்க்கு பெறுமானமான செயல் என்றார் நெகிழ்ச்சியோடு. தமிழகத்தை சேர்ந்த இயக்குனர்களில் பாலுமகேந்திரா மட்டுமே வகுப்பெடுத்தார். மற்றபடி அங்கே பாடம் நடத்திய எல்லாருமே வடக்கை சேர்ந்தவர்கள். இந்த வகுப்பை எப்படி தமிழில் எடுத்திருக்க முடியும் என்பதே எனது கேள்வி என்று முடித்தார் அந்த இளைஞர்.

வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவராவது பெரிய இயக்குனராக வந்துவிட்டால் கமலின் முப்பதாண்டு கனவுக்கு ஒரு மரியாதை இருக்கும். செய்வாங்களா?

Thursday, June 4, 2009

கடவுள் வேடம் - தனுஷ் உறுதி

மித்ரன் ஏ. ஜவஹர் இயக்கத்தில் குட்டி, வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம், செல்வராகவன் இயக்கத்தில், இது மாலை நேரத்து மயக்கம், அத்துடன் பூபதி பாண்டியன், சுராஜ் இயக்கத்தில் தலா ஒரு படம். 2010 வரை நிரம்பி வழிகிறது தனுஷின் கால்ஷீட்!

இந்த பிஸியான நேரத்திலும் கவுரவ வேடத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் தனுஷ்.

மலையாள நந்தனத்தை சீடன் என்ற பெயரில் தமிழில் இயக்குகிறார் சுப்பிரமணிய சிவா. நந்தனத்தில் அரவிந்த் கடவுள் வேடத்தில் நடித்திருந்தார். அந்த வேடத்தை தமிழில் செய்ய சுப்பிரமணிய சிவா தேர்ந்தெடுத்தது தனுஷை.

திருடா திருடி என்ற திருப்புமுனை படம் தந்தவர் என்பதால் இந்த கெஸ்ட் ரோலில் நடிக்க தனுஷ¤ம் சம்மதித்திருந்தார். யோகிக்குப் பிறகு ஆதிராஜாவின் ராமர் படத்தில் சுப்பிரமணிய சிவா நடிப்பதால் சீடன் தொடங்கப்படுமா? தனுஷ் நடிப்பாரா? என்ற கேள்விகள் எழுந்தன.

ராமர் படத்தில் நடித்துக் கொண்டே சீடனை இயக்கயிருப்பதாக தெரிவித்துள்ளார் சுப்பிரமணிய சிவா. அதேபோல சீடனில் நடிப்பதை தனுஷ¤ம் உறுதி செய்துள்ளார்.

தயாரிப்பாளர் மீது நடிகை புகார்


அகம்புறம் தயாரிப்பாளர் மீது கவுன்சிலில் புகார் தெரிவித்துள்ளார் மீனாட்சி.

அகம்புறம் படத்தில் ஷாம் ஜோடியாக மீனாட்சி நடித்து வருகிறார். தீநகர் படத்தை இயக்கிய திருமலை படத்தை இயக்குகிறார். சமீபத்தில் மலேசியாவில் இதன் படப்பிடிப்பு நடந்தது.

சில நாட்கள் முன்பு சென்னை விமான நிலையத்தில் பல மணி நேரம் மீனாட்சி தவித்த சம்பவம் நடந்தது. அவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்பு கொள்ளவே, அவர்கள் வேறு விமானத்தில் டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

தன் மீதுள்ள கோபத்தில் அகம்புறம் தயாரிப்பாளர் அலட்சியமாக நடந்து கொண்டதால்தான் சென்னை விமான நிலையத்தில் பல மணி நேரம் மாட்டிக்கொள்ள நேர்ந்தது என்று தயாரிப்பாளர் மீது குற்றம் சாற்றியுள்ளார் மீனாட்சி.

மேலும் இதுகுறித்து தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் புகார் கொடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

லைலா மஜ்னு... ரத்தனுக்கு பதில் ராகுல்

காதலை மட்டுமே கவிதையாக்கும் தபூசங்கர் இயக்குனராகும் படம் லைலா மஜ்னு காதல் ‌விளையாட்டு. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. அதற்குள் சில மாற்றங்கள்.

லைலா மஜ்னுவில் இரண்டு ஹீரோக்கள், ஒரு ஹீரோயின். கார்த்திக் அனிதாவில் நடித்த ரத்தன் இருவரில் ஒருவர் என்று முன்பு கூறப்பட்டது. இப்போது அவர் இல்லையாம்.

ரத்தனுக்குப் பதில் ராகுல் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ரவிவர்மனின் மாஸ்கோவின் காவிரியில் அறிமுகமானவர். இன்னொரு ஹீரோவாக குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் ராமகிருஷ்ணன் நடிக்கிறார். இவர்கள் இருவருக்கும் மேக்கப் டெஸ்ட் நடக்கிறது. ரிசல்ட் தெரியும் வரை இவர்களும் உறுதியில்லை.

ஹீரோயினாக அமலா நடிக்கிறார். கலை இயக்குனர் வீரசமர் ஜோடியாக பாமரன் படத்தில் நடிக்க கேரளாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர் இவர். இப்போதைக்கு லைலா மஜ்னுவில் உறுதியாக நடிப்பவர் என்று இவரை மட்டுமே சொல்லலாம்!

கோடிகளை அள்ளும் கந்தசாமி


தமிழில் முதல் சூப்பர் ஹீரோ படம் என்ற அடைமொழியுடன் தயாராகியிருக்கிறது கந்தசாமி. பணத்தை பணம் என்று பார்க்காமல் தண்ணீராக இறைத்திருக்கிறார் தயாரிப்பாளர் தாணு.

காலணிக்கும், காஸ்ட்யூமுக்குமே நான்கு கோடி வரை செலவழித்தாக செவிவழி செய்தி. சரி, போட்ட பணம் திரும்ப கிடைக்குமா?

படம் வெளியாகும் முன்பே கல்லா கட்டத் தொடங்கியிருக்கிறது கந்தசாமி. இதன் ஆடியோ ரைட்சும், கேரள உரிமையும் பல கோடிகளுக்கு விற்பனையானது. சில நாட்களுக்கு முன் வெளிநாட்டு உரிமையும் கைமாறியது.

ஐங்கரன் இண்டர்நேஷனல்ஸ் கந்தசாமியின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையை வாங்கியுள்ளது. இதற்காக அந்நிறுவனம் தாணுவுக்கு கொடுத்த பணம் ஐந்து கோடிகள்! விக்ரம் படங்களைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய சாதனை.

தமிழில் படம் வெளியாகும் அதேநாள் மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்ட்ரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய வெளிநாடுகளிலும் படம் ரிலீஸாகிறது.

'பெருமாளே....' படவிழாவில் பாண்டியராஜன் சுவாரஸ்யம்!


ஆறுமுகம் ஆடியோ வெளியீட்டு விழாவில் மேலும் ஒரு சுவாரஸ்யம் பாண்டியராஜனின் பேச்சுதான்.

'போலீசுக்கு பிடிக்காதது, பொதுமக்களுக்கு பிடித்தது ஒன்று இவரிடம் இருக்கு'. இப்போது பாண்டியராஜன் பேசுவார் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் அமலன் சொல்ல, பலத்த கைதட்டல்களுக்கு இடையே மைக்கை பிடித்தார் பாண்டியராஜன். 'முன்னெல்லாம் திருட்டு முழின்னுதான் சொல்லிட்டு இருந்தாங்க. இவரு போலீஸ் அது இதுன்னு பயமுறுத்துறார் என்றபடியே துவங்கியது அவர் பேச்சு. நானும் சுரேஷ்கிருஷ்ணாவும் பல வருடத்து பிரண்ட்ஸ். ஒன்னாதான் இந்த ஃபீல்டுக்கு வந்தோம்னு சொல்ல மாட்டேன். ஏன்னா எனக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை' .

'ஒரு முறை பிளைட்ல வரும்போது என்னோட பக்கத்து சீட் அவருக்கு. இந்த ஒரு மணி நேர பயணத்திலே பத்து வருஷம் பழகின அன்பை கொடுத்தார். ஏர் ஹோஸ்டஸ் அவரிடம் ஒரு கவரை கொடுத்தார். அவரு அதிலே 500 ரூபாய் வச்சு திருப்பி கொடுத்தார். எனக்கு ஒன்னுமே புரியலே. பிறகு விசாரிச்சா அநாதை குழந்தைகளுக்கான நன்கொடையாம் அது. பறக்கிற போதும் இரக்க குணத்தை காட்டுகிறவர் சுரேஷ் கிருஷ்ணா' என்றார் பாண்டியராஜன்.

நான் ஆண்பாவம் படத்தை டைரக்ட் பண்ணும் போது ஒரு சம்பவம். முதலில் டைட்டில் போடுவதற்காக ஒரு 'லோகோ' பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்ணினோம். நான் சொன்ன உலக உருண்டையெல்லாம் வேணாம்னு சொல்லிட்டாரு புரட்யூசர். கடைசியா பெருமாள் சிலையை லோகோவாக வைத்துக் கொள்ளலாம்னு முடிவு பண்ணினோம். பாண்டி பஜார்லேந்து ஒரு பெருமாள் சிலையை வாங்கிட்டு வச்சு தினமும் பொட்டு கடலையெல்லாம் வச்சு பூஜை பண்ணினோம். படத்தோட கடைசி நாள் ஷ¨ட்டிங் அன்னைக்கு லோகோவை எடுத்தோம். சிலையிலே ஒரு கயிறை கட்டி லேசா கேமிரா லென்ஸ் வரைக்கும் இழுக்கணும். இழுத்திட்டு இருக்கும்போதே, படக்குன்னு கீழே விழுந்து சிலை ரெண்டு துண்டாயிடுச்சு.

அவ்வளவுதான்... படம் அவுட்டுன்னுட்டாங்க. ரொம்ப மூட் அவுட்டாயிடுச்சு. பேக்கப்புன்னு சொல்லிட்டு வீட்டுக்கு போயிட்டேன். மறுநாள் வந்து அதே சிலையை ஒட்ட வைச்சு லோகோவை எடுத்திட்டேன். 'பெருமாளே, இந்த படத்திலே முதல்ல உன்னைதான் காட்டுறேன். உனக்கு நாங்க கொடுக்கிற மரியாதையை காப்பாத்திக்க வேண்டியது உன் பொறுப்பு'ன்னு சொல்லிட்டேன். அந்த படம் 225 நாட்கள் ஓடுச்சு. அதே மாதிரி ஆறுமுகம்னு பேரு வச்சிருக்கீங்க. அந்த மரியாதையை காப்பாத்திக்க வேண்டியது அவன் பொறுப்பு என்றார்!

பட வாய்ப்பு இல்லேன்னா என்ன? பேசியே ஜெயிப்பார் பாண்டியராஜன்!

பரத்தின் ஆறுமுகம்? ரஜினி அனுப்பிய எஸ்.எம்.எஸ்


வாசனைக்கு கூட ஒரு நடிகை இல்லை. ஆனாலும் ஆறுமுகம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா களை கட்டியது. படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் அக்கறையான அழைப்பு மேடையிலும், கீழேயும் கூட்டத்தை சேர்த்திருந்தது. இவர்களுடன் சின்னத்தளபதியின் ரசிகர்களும் திரளாக வந்திருந்ததால் விசில், கூச்சல் என்று ஏக அமர்க்களம்!

சூப்பர் ஸ்டார் நடித்த 'மூன்று முகம்' சூப்பர் ஹிட்! இதுவோ 'ஆறு முகம்'. படம் டபுள் சூப்பர் ஹிட் ஆகணும் என்று டைமிங்காக அடித்தார் எஸ்.பி.முத்துராமன். நாம எப்படி இந்த டைட்டிலை மிஸ் பண்ணினோம்? என்று படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு மெசேஜ் அனுப்பியிருந்தாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி. 'அந்தளவுக்கு இந்த டைட்டில் எல்லாரையும் ரீச் பண்ணியிருக்கு' என்றார் பரத். நன்றிக்குரியவர்கள் லிஸ்டில் சுரேஷ்கிருஷ்ணாவுக்கு அடுத்து பரத் சொன்னது ரம்யா கிருஷ்ணனுக்குதான். 'படையப்பா மாதிரியே இதிலே ஒரு பவர்ஃபுல் ரோல் பண்ணியிருக்காங்க' என்றவர், 'நான் இந்த படத்திலே நடிக்க முதலில் தயங்கினேன் தெரியுமா?' என்றார்.

'எனக்கெல்லாம் இது தாங்குமா? என்று கேட்ட பரத்தை சமாதானப்படுத்தி தைரியத்தை வரவழைத்ததும் சுரேஷ் கிருஷ்ணாதானாம். பழனி படம்தான் என்னை மாஸ் ஹீரோவாக்கியது. அதற்கு பிறகு ஆறுமுகம் எனக்கு வேறொரு முக்கிய இடத்தை தமிழ் சினிமாவில் கொடுக்கும்' என்று நம்பிக்கையோடு பேசினார் பரத்.

'தேவா சார் இரண்டு வருஷம் படம் இல்லாம இருந்ததா இங்கே சொன்னார். சார், நீங்க அப்படி சொல்லக் கூடாது. தமிழ்சினிமாவின் வரலாற்றில் நீங்க ஒரு பெரிய எபிசோட்! இரண்டு வருஷம் உங்களை பயன்படுத்தலேன்னா அது இந்த சினிமாவுக்குதான் நஷ்டம்' என்று ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார் பிரசன்னா!

இந்தி சினிமா இந்திய சினிமா ஆகாது: கமல்


'நான் கட்டிய படிக்கட்டுக்கு பக்கத்தில் எதற்கு இன்னொரு படிக்கட்டு? அதற்கும் மேல் ஒரு படிக்கட்டை நீ கட்டப் பார்' என்று புரட்சித் தலைவர் [^] எம்ஜிஆர் என்னிடம் கூறியதைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்றார் நடிகர் [^] கமல்ஹாஸன்.

சென்னை [^] ஐ.ஐ.டி. அமைப்பும், கமல்ஹாஸனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனலும் இணைந்து சென்னையில் சர்வதேச திரைக்கதை பயிற்சி முகாம் நடத்தின. இந்த முகாம் கடந்த 28ம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடந்தது. இயக்குநர்கள், இயக்குநராகப் போகும் புதியவர்கள் என 250 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்த ஒருவார காலமும், இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட படைப்பாளிகள் பங்கேற்று திரைக்கதை குறித்து பாடங்கள் - விவாதங்களில் பங்கேற்றனர். அனைத்து நாட்களிலும் கமல்ஹாஸனும் உடனிருந்து புதிய படைப்பாளிகளை உற்சாகப்படுத்தினார். பாடங்கள் எடுத்தார்.

நிகழ்ச்சியின் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. அதில் கமலஹாசன் பேசியதாவது:

சினிமாவில் பாடல்கள் குறித்து இப்போது அதிகமாகப் பேசப்படுகிறது. பாடல்களுக்கு நான் எதிரி அல்ல. எல்லா படங்களிலும் ஏன் பாடல்களை திணிக்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி. ஒரு படத்தில் 5 அல்லது 6 பாடல்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று திணிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதேபோலத்தான் நடனமும்.

என் சினிமா வாழ்க்கையை ஒரு நடன உதவியாளராகத்தான் தொடங்கினேன். ஆனாலும் சொல்கிறேன்... பாடல்களும், நடனமும் ஒரு படத்துக்கு முக்கியம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்ல. கதையின் போக்கை அது தடுக்கிறது. ஆனால் இசை முக்கியம். அதன் பங்கு மகத்தானது.

சினிமாவில் நிரந்தரமான ஒரு விஷயம் என்ன தெரியுமா... மாற்றம்தான்!. மாற்றம் ஒன்றே மாறாதது.

தொழில்நுட்பரீதியில் ஏற்படும் மாற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கலாசாரம் என்பது தனிப்பட்ட விஷயம் கிடையாது. கொஞ்ச காலத்துக்கு முன்பு விதவை பெண்களுக்கு மொட்டை அடித்தார்கள். இப்போது யாரும் அப்படி மொட்டை அடிப்பது இல்லை. கலாசாரம் மாறிக்கொண்டே வருகிறது.

அதுபோல் மக்களின் கவனமும் குறைந்து கொண்டே வருகிறது. இனி, நிறைய குறும் படங்கள் எடுக்க வேண்டியதிருக்கும். நீளம் குறைவாக உள்ள படங்கள் அதிகமாக தயாராகும். அது காலத்தின் அவசியம்.

இந்தி சினிமா இந்திய சினிமா ஆகாது:

தேசிய சினிமா [^] என்பது இந்தி சினிமா கிடையாது. இந்தியும் ஒரு மாநில மொழிதான். ஒரு கால கட்டத்தில் இந்தி, தேசிய மொழி ஆவதை எதிர்த்தோம். ஏனென்றால், இந்தி தெரிந்தால் மட்டுமே மத்திய அரசில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டதால் இந்தியை எதிர்த்தோம் என்றார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

இந்த திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை எனது சாதனை அல்ல. எனக்குப் பிந்தைய தலைமுறை படைப்பாளிகளை உருவாக்கும் ஒரு அக்கறையின் வெளிப்பாடு. அதேபோல இது ஒன்றும் தொடர்ச்சியான இடைவெளிகளில் நடத்தப்படும் வகுப்புகள் கிடையாது. தேவையென்றால் அடுத்த மாதமே கூட நடத்துவேன்.

இது எனது சாதனையும் அல்ல. ஒரு ஆசானாக இதில் நான் பங்கேற்கவில்லை. ஆசான் என்ற போர்வையில் கற்றுக் கொள்ள உள்ளே நுழைந்த ஒரு மாணவன்தான் நான். இன்னும் கேள்வி எழுப்புகிற திமிர் எனக்குள் அப்படியே இருப்பதால் என்னால் ஒரு ஆசிரியனாக முடியாது.

என்ன சொன்னார் எம்ஜிஆர்?

புதிய படைப்பாளிகளுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், அடுத்த கட்டப் படங்களை உருவாக்குவதில் நாம் கவனமெடுக்க வேண்டும் என்பதே.

ஒரு முறை எம்ஜிஆர் அவர்களிடம், உங்களை மாதிரி மக்களுக்கான படங்களை உருவாக்கவே நான் முயற்சித்து வருகிறேன் என்றேன். அதற்கு அவர், அந்தமாதிரி செய்துவிடாதே... நான் உருவாக்கியதைப் போன்ற படங்களை நீயும் ஏன் முயற்சிக்கிறாய்?. ஒரு படிக்கட்டுக்குப் பக்கத்தின் இன்னொரு படிக்கட்டு எதற்கு?. முடிந்தால் அதைவிட உயரத்தில் ஒரு படிக்கட்டை கட்டு என்றார்.

அதற்கான முயற்சிகள்தான் இது. நாளை இந்தப் படிக்கட்டையும் தாண்டி பல படிக்கட்டுகள் கட்டப்பட வேண்டும்.

வரும் நாட்களில் இந்தி [^]யாவின் பல மாநிலங்களில் முக்கிய நகரங்களில் இந்த பயிற்சிப் பட்டறைகள் நடத்துவோம். அதற்கான முயற்திகளை மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார் கமல்.

Wednesday, June 3, 2009

ஹா‌ரிபாட்டர் கிளிப்பிங்ஸ்


ஹா‌ரிபாட்டர் சீ‌ரிஸின் ஆறாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. வார்னர் பிரதர்ஸின் டாலர் சுரங்கத்தில் ஹா‌ரிபாட்டரும் ஒன்று.

உலக அளவில் அதிக வசூலை ஈட்டிய படங்களின் பட்டியலில் ஹா‌ரிபாட்டர் சீ‌ரிசுக்கு முக்கியமான இடம் உண்டு. இதுவரை வெளியான அனைத்து பாகங்களுமே வசூல் சாதனை பு‌ரிந்தவைதான். என்றாலும் விரைவில் வெளிவரயிருக்கும் ஆறாம் பாகம் முந்தைய படங்களின் வசூலை முறியடிக்க வேண்டும் என நினைக்கிறது படத்தை தயா‌ரித்திருக்கும் வார்னர் பிரதர்ஸ்.

படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிக‌ரிக்கும் விதமாக படத்தின் ஸ்டில்கள் மற்றும் கிளிப்பிங்ஸ்களை தவணை முறையில் வெளியிட்டு வருகிறது வார்னர் பிரதர்ஸ். சென்ற வாரம் படத்தின் சில புகைப்படங்களையும், இரு கிளிப்பிங்ஸ்களையும் வார்னர் பிரதர்ஸ் வெளியிட்டது. இதில் ஒன்று படத்தின் மேக்கிங் பற்றியது.

அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே இந்த கிளிப்பிங்ஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. ஆறாம் பாகமான ஹா‌ரிபாட்டர் அண்டு தி ஹாஃப் பிளட் பி‌ரின்ஸ் வசூலில் முந்தைய ஐந்து பாகங்களையும் முந்தும் என அடித்து‌க் கூறுகிறார்கள் ஹாலிவுட் விமர்சகர்கள். தயா‌ரிப்பாளர்களுக்கு அதுதானே வேண்டும்.

அசல் வில்லன் ராஜீவ் கிருஷ்ணா


வில்லன்களுக்கு தமிழ் சினிமாவில் தட்டுப்பாடு. ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தவர்களை எல்லாம் வில்லனாக்குகிறார்கள் இயக்குனர்கள். சுமன், சிபி என்றும் நீளும் இந்தப் பட்டியலின் புதுவரவு, ராஜீவ் கிருஷ்ணா.

ஆஹா படத்தில் ஹீரோவாக நடித்த ராஜீவ் கிருஷ்ணாவுக்கு பிறகு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. ஒன்றிரண்டு படங்களில் சின்ன வேடங்களில் நடித்தார்.

இந்நிலையில், நியூட்டனின் 3ஆம் விதி திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. ஆஹாவில் வெள்ளந்தி ஹீரோவாக நடித்தவர் நியூட்டனின் 3ஆம் விதியில் வில்லனாக வெளுத்து வாங்கினார். விளைவு...? வில்லன் வாய்ப்புகள் துரத்துகிறது ராஜீவ் கிருஷ்ணாவை!

அஜித்தின் அசல் படத்தில் வில்லனாக நடிக்க ராஜீவ் கிருஷ்ணாவை தேர்ந்தெடுத்திருக்கிறார் சரண். அசல் பழிவாங்கும் கதை. பல்வேறு வெளிநாடுகளில் கதை நடக்கிறது. கதையின் சர்வதேச 'டச்'சுக்கு ஏற்ற வில்லன் தேவை.

ராஜீவ் கிருஷ்ணாவின் தோற்றமும், நடிப்பும் அதற்கு நூறு சதம் பொருந்தும் என்பதால் அவரை தேர்வு செய்திருக்கிறார் சரண். பரத்வாஜ் இசையமைக்கும் இந்தப் படத்தை சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

ஜாலிலோ ஜிம்கானோ..’ போ(பா)ட்டு தாக்கிய விவேக்


நடிப்பு, காமெடி,கருத்துன்னு அவர்‘பாட்டு’க்கு இருந்த விவேக்கை இப்ப பாடவும் வச்சுட்டாங்க.

ஐஸ் ஹவுஸ் தியாகு தயாரிக்கும் படம் ‘இத்தனை நாளாய் எங்கிருந்தாய்’. சன் டி.வி புகழ் ஆனந்த கண்ணன்தான் படத்தின் நாயகன். புதுமுகம் மனோசித்ரா நாயகி. இன்னொரு நாயகி சுஜிபாலா. மாஜி நடிகை பபிதா பவுர்ணமி திரைக்கதை, வசனம் எழுதிய இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார் ஆர்.பாலு.

Viduppu.comபடத்துல விவேக் பாட்டுபாடி நடனமாடுவது போன்ற காட்சி இடம்பெருகிறதாம். விவேக்குக்கு எஸ்.பி.பி,ஜேசுதாஸா பாட முடியும். இளம் பாடகர்களில் ஒருவரை பாடவைக்கும் முயற்சியில் இறங்கிய இசையமைப்பாளர் தினாவுக்கு எதுவுமே திருப்திப்படல.

புதுப்பாடகர் ஒருவரை பாடவச்சிரலாமேன்னு இயக்குனர் சொன்ன ஐடியாவும் சரிபட்டு வரலையாம். என்ன செய்யலாம்னு யோசிச்சப்பதான், ”ஏன் நான் பாடினா தமிழ்நாட்டு ஜனங்க காதுல பஞ்சா அடைச்சுக்குவாங்க?” என்று காமெடி செய்தாராம் விவேக்.

விவேக்கின் காமெடியை சிரியஸா எடுத்துக்கொண்ட தினா, நீங்களே பாடிடுங்கன்னு அன்பு கட்டளையிட, அடுத்த நாளே ஆயத்தமாகிட்டாராம் விவேக். நா.முத்துக்குமார் எழுதிய ‘ஜாலிலோ ஜிம்கானா...... டோலிலோ போல்கானா’ என அர்த்தமுள்ள வரிகளை பாடகி ரீத்தாவுடன் இணைந்து பாடிமுடித்தாராம் விகேக்.

பின் குறிப்பு: தியேட்டர் டெக்னீஸியன்கள் யாரும் ஓடவில்லையாம்.

தமன்னாவின் தங்கச்சியை கண்டுபிடிச்சாச்சு


இந்த கேள்வியைத் தான் ‘கண்டேன் காதலை’ படக்குழுவினரைப் பார்த்து எல்லோரும் கேட்க வேண்டியதாயிடுச்சு. ஷெரினை முதலில் போய் கேட்க ‘தங்கச்சி வேஷமா அய்யோ வேணாம்பா...’ என்று நைசாகக் கழன்று கொண்டார்.

வேறு நடிகையைத் தேடும் பணியில் மும்முரமானது படக்குழு. தீவிர வேட்டைக்கு பிறகு தமன்னா தங்கச்சி சிக்கிக் கொண்டார்.

Viduppu.comஅவர் மாடலிங் கேர்ள் ‘ஷபான் சரன்’. இவர் ஏற்கனவே பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். ஸ்கூட்டி பெப், கிட்கேட் போன்றவை இவர் நடித்த விளம்பரப் படங்கள்.

முதல் முறையாக பெரிய திரைக்கு வருகிறார் ஷபான் சரன்.

ரகசியா-ஒருநாளைக்கு ஒன்றரை லட்சம்


பல படங்களில் ஒரு பாடலுக்கு வந்து கிளாமர் குத்தாட்டம் போட்டு பார்ப்பவர்களை ‘ஆ’ என வாய் பிளக்க வைப்பவர் ரகசியா. அவர் ஒருநாளைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்குகிறார். அட, நடிக்கிறதுக்குதாங்க.

இதுவரை பாடல்களுக்கு மட்டுமே வந்து போன ரகசியா முதன் முறையாக ‘மூணார்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஒரு கொலையை நேரில் பார்க்கும் டான்ஸராக இந்தப் படத்தில் வந்து போகிறார்.

அப்பவும் டான்ஸ்தானா?

மூணார் பகுதியில் தேனிலவுக்கு சென்ற தம்பதியில், மனைவி கணவனை தன் காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததுதான் படத்தின் கதைக் கரு. இதில் கொலை செய்யப்பட்ட கணவன் உயிருடன் வந்தால் என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் பில்டப் குடுத்து சொல்லியிருக்கிறார்களாம். இந்தப் படத்தில் நடிக்கத்தான் அவ்வளவு சம்பளம் வாங்குகிறார் ரகசியா.

குத்தாட்டம் போடுவதற்கு வாங்குவதை விட இது குறைவா? இல்ல அதிகமா?

மம்மி நடிகையின் பிடிவாதம்


மம்மி நடிகை என்ற உடன் உங்கள் நினைப்பு ஹாலிவுட் பக்கம் போய்விட வேண்டாம். எல்லாம் நம்ம தமிழ் நடிகையைப் பத்தித்தான். ஹீரோயினாக அறிமுகம் ஆகி வரவர கழுத தேய்ஞ்சி கட்டெறும்பான கதையா துக்கடா கேரக்டர்களில் எல்லாம் வேஷம் கட்டியவர் மாளவிகா.
பட வாய்ப்புகள் இல்லாததால் சுமேஷ் என்பவரின் கரம் பற்றிக் கொண்டு செட்டில் ஆகி விட்டார். நம்ம இயக்குனர்கள் சும்மா இருப்பார்களா? கல்யாணம் ஆகிட்டாதான் இருக்கவே இருக்கு அண்ணி, அம்மா கேரக்டர்கள். இயக்குநர்கள் அவர் வீடு தேடி கதவைத் தட்ட, ‘எனக்கொண்ணும் வயசாகிடல... இளம் ஹீரோக்களுக்கு ஜோடியா நடிக்கிற படமா இருந்தா வாங்க... இல்ல வராதீங்க...’ என்று கதவை ஓங்கி பட்டுன்னு சாத்துறாராம்.

தொடர்ந்து கதவை தட்டிக்கிட்டே இருப்போம்ல...

காசிமேட்டை குறிவைத்திருக்கும் ஜீவா, விஜய்?


தனது பிறந்த நாளான ஜுன் 22-ல் கட்சி ஆரம்பிக்கிறார் நடிகர் விஜய். நாம் சில வாரங்களுக்கு முன்பு எழுதியிருந்த செய்தி இது. தேர்தலுக்கு முன்புதான் இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்திருந்தார் விஜய். முடிவுகள் பத்திரிகைகளில் வந்த சர்வே போல் அல்லாது வேறு மாதிரி அமைந்துவிட்டதால், 'சேம் சைடு கோல்' போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது விஜய்க்கு. எனவே தனது அரசியல் கட்சி விஷயத்தில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் இப்போது.

இந்த அமைப்பின் பெயரில் கட்சி என்ற வார்த்தையோ, கழகம் என்ற வார்த்தையோ இடம் பெறப் போவதில்லையாம். வேண்டுமானால் இயக்கம் என்று அமையும்படி ஒரு பெயரை வைத்துக் கொண்டு எல்லோரையும் ஒருங்கிணைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம். "எதையாவது ஆரம்பித்துக் கொள்ளுங்கள். எனது பங்கு பின்னணியில்தான்" என்று கூறிவிட்டாராம் விஜய். எனவே இவர் நிறுவன தலைவராக மட்டுமே இருப்பாராம். செயல் தலைவர், பொருளாளர் போன்ற முக்கியமான பதவிகளை தானே வைத்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி.

இதற்கிடையில் தனது ஐம்பதாவது படத்திற்கு உரிமைக்குரல் என்ற பெயரை தேர்வு செய்திருக்கிறாராம் விஜய். படத்தில் இவருக்கு மீனவர் வேடம் என்கிறார்கள். அப்படியென்றால் மீனவ நண்பன் என்றல்லவா வைத்திருக்க வேண்டும்?

சிங்கம் புலி படத்தில் ஜீவாவும் மீனவராகதான் நடிக்கிறாராம். காசிமேட்டை இரண்டு பேரும் சேர்ந்து குத்தகை எடுத்திட்டா, வலையை எங்கே காய வைப்பாங்களாம்?

தமன்னாவுக்கு தமிழ் சொல்லித்தரும் ஹீரோ...


ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சீசன். இது தமன்னா சீசன்! நட்சத்திர ஹோட்டலில் எக்கச்சக்க ஆட்டம் போடுகிறார் என்று ஒருபக்கமும், முன்னணி இயக்குனர்களுக்காகவே பிரத்யேக பார்ட்டி கொடுக்கிறார் என்று இன்னொரு பக்கமும் தமன்னா பற்றி தமுக்கடிக்கிறார்கள்.

விசாரித்தால், "இப்படி பார்ட்டி வச்சுதான் வாய்ப்பு வாங்கணும்ங்கிற நிலைமை அவங்களுக்கு இல்லியே"ங்குது தமன்னாவின் நெருக்கமான வட்டாரம். "தமிழ்லே என்ன வேணா எழுதிட்டு போகட்டும். அது அவங்களுக்கு தெரிய போறதில்லே. ஏன்னா தமிழ்லே பேசினாலே கொஞ்சம் கொஞ்சம்தான் அவங்களுக்கு புரியும். இதிலே இவங்க எழுதி, அவங்க படிக்கப் போறாங்களாக்கும்? விடுங்கப்பா" என்கிறது இதே நெருக்கமான வட்டாரம். இப்படியெல்லாம் சொல்லிடுறாங்க என்பதற்காகவே தமிழ் படிக்க ஆரம்பித்திருக்கிறாராம் தமன்னா. முதலில் தாராளமா பேச கத்துக்கணும். அப்புறம் படிக்கவும் கத்துக்கணும் என்பது அவரது ஆசை.

மலர மலர பக்கத்திலே இருக்கும் பொண்ணுக்கு அகர முதல சொல்லி தருவதற்கு ஆர்வத்தோட அலையுறாங்களாம் அவரோட நடிக்கிற ஹீரோக்கள். அதில் முக்கியமான ஒருத்தரு "என்னோட நீ தமிழ்லே மட்டும்தான் பேசணும்"னு சொல்லியிருக்காராம்.

இது ஒருபுறம் இருக்க, சற்றே சரிவில் இருக்கும் இன்னொரு இளம் ஹீரோ இவரது கால்ஷீட் கேட்டதற்கு, தானாகவே பயந்து ஓடும்படி ஒரு சம்பளத்தை சொன்னாராம் தமன்னாவின் அப்பா. நயன்தாராவிலிருந்து, த்ரிஷா வரைக்கும் வேண்டாத ஹீரோவை தட்டிக்கழிக்க இந்த பாலிசியைதான் கடைபிடிக்கிறார்கள்.

அப்போ தமன்னாவோட வளர்த்தி கொஞ்சம் அதிகம்தான்னு சொல்லுங்க...

கன்னடப் படம் இயக்கும் சுஹாசினி!


தமிழில் இந்திரா என்ற படத்தை இயக்கிய பிறகு அமைதியாகிவிட்ட நடிகையும் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாஸினி இப்போது மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். இந்தமுறை அவர் கன்னடப் படத்தை இயக்குகிறார்.

அனந்த நாக்கின் கன்னடப் படத்தில் நடித்து வரும் சுஹாசினி, அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போதுதான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இந்தப் படத்தில் விஷ்ணுவர்தன் நாயகனாக நடிக்கிறார். அவர் கூறுகைில், "நீண்ட நாட்களாகவே எனக்கு ஒரு கன்னடப் படம் இயக்கும் ஆர்வம் உள்ளது. விஷ்ணுவர்தன் என்னை நீண்ட காலமாக வற்புறுத்தி வருகிறார். ஆனால் என் மகன் படிப்பு முடியட்டுமே என்று காத்திருந்தேன். இப்போது சுதந்திரமாகிவிட்டேன். படம் இயக்கும் நேரம் வந்துவிட்டது.

அடுத்த ஆண்டு அந்தப் படம் ரிலீஸாகும். நிச்சயம் கன்னட ரசிகர்கள் விரும்பும் வகையில் அந்தப் படம் அமையும்" என்றார் அவர்.

1984-ம் ஆண்டிலிருந்து கன்னடப் படங்களில் நடிக்கிறார் சுஹாஸினி என்பது குறிப்பிடத்தக்கது.

நான் ஒன்றும் காமெடியன் இல்லையே? அசின் கோபம்!


தி டின்னர் வித் அசின்! டாடா ஸ்கை நிறுவனம் இப்படியொரு நிகழ்ச்சியை நடத்தியது. அசினுடன் விருந்தென்றால் சும்மாவா? சைட் டிஷ்ஷாக அசினையே சேர்த்து சாப்பிடுகிற வெறியோடு வந்திருந்தார்கள் வின்னர்கள்! இந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் அசின் என்பதால், வளைத்து வளைத்து டாடா ஸ்கை பற்றியே கேள்வி கேட்டார்கள் அவரிடம். கேட்டது நிருபர்கள் அல்ல, நிறுவனம்!

ஒருவழியாக 'நீங்களும் கேட்கலாம்' என்று வழிவிட்டு ஒதுங்கியது டாடா. பிறகு நிருபர்களின் கேள்விகளுக்கு ரொம்ப பிரண்ட்லியாக பதில் சொல்ல ஆரம்பித்தார் அசின். ஒவ்வொரு நிருபர்களிடமும், 'எப்படியிருக்கீங்க, பார்த்து ரொம்ப நாளாச்சு' என்று தனது பழைய பாசத்தை மறக்காமல் நினைவுபடுத்திய அசின், அதிகம் எதிர்கொண்டது ஒரே ஒரு கேள்வியைதான். எப்போ தமிழுக்கு வரப்போறீங்க?

நல்ல கதையா இருந்தா சொல்லுங்க. நாளைக்கே தமிழுக்கு வர நான் ரெடி என்றார். பாலிவுட், கோலிவுட், மல்லுவுட், ஏன் ஹாலிவுட்டுக்கு கூட போயிட்டீங்க, எது பிடிச்சிருக்கு? என்றதற்கு, 'எல்லாமே பிடிச்சிருக்கு' என்ற அசினின் பதிலில் தப்பிச்சோம் என்ற நிம்மதி.

எல்லாருக்கும் உதவி செய்யுறவர் நீங்க. ஆனா வேலைக்காரர் விஷயத்தில் கெட்ட பேரு வந்திருச்சே? என்ற கேள்விக்கு ரொம்பவே கவலைப்பட்டார் அசின். 'ஆமாம்... அதே நேரத்தில் எப்பவுமே எல்லாமே பாசிட்டிவா நடக்கும்னு நினைக்க கூடாது. நமக்கு எதிரான விஷயங்கள் நடக்கும் போது கலங்கிடவும் கூடாது. நம்ம மேலே தப்பு இல்லாதப்போ எதுக்கு கலங்கணும்?' என்றார்.

ஒரு ஜோக் சொல்லுங்களேன்? என்று இன்னொரு நிருபர் கேட்டபோதுதான், சிரித்துக் கொண்டே கோபம் ஆனது பூங்கொத்து. 'நான் ஒன்றும் காமெடியன் இல்லையே' என்றார், லேசான கடுகடுப்புடன்! ஆக, பேட்டி அந்த கேள்வியோடு இனிதே(?) நிறைவடைந்தது.

முன்னதாக போட்டியில் வெற்றி பெற்ற ரசிகர்கள் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்த டாடா ஸ்கை கருவி ஒன்றை அசினுக்கு பரிசளித்தார் அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் விக்ரம் கௌஷிக்.

Tuesday, June 2, 2009

ரஜினி - மீண்டும் சிகரெட் ஸ்டைல்?


ரஜினி என்றாலே கலைந்த தலைமுடியும், சிகரெட்டை தூக்கிப் போடும் ஸ்டைலும்தான் நினைவுவரும். ஆனால், கடைசி இரு படங்களில் சிகரெட்டை கையாலும் தொடவில்லை ரஜினி. காரணம், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி.

புகையிலைக்கு எதிரான அன்புமணியின் போரில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள். ரஜினி, ஷாருக்கான் போன்ற நடிகர்களிடம், திரைப்படத்தில் புகைப்பிடிப்பது போல் நடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் அன்புமணி. மேலும், சுகாதாரத்துறையின் நெருக்கடியால் புகைப்பிடிக்கும் காட்சிகளைக் கொண்ட திரைப்படங்கள் தணிக்கையில் கடும் பிரச்சனைகளை எதிர்கொண்டன.

இந்நிலையில், திரைப்படங்களில் சிகரெட் புகைப்பதில்லை என்று அறிவித்தார் ரஜினி. ஆனாலும், ஷாருக் உட்பட பெரும்பான்மையான திரையுலகினர் அன்புமணியின் கோரிக்கையை ஏற்காததுடன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

புதிய மத்திய அரசில் சுகாதாரத்துறை மந்திரியாக பொறுப்பேற்றிருக்கும் குலாம் நபி ஆசாத், ஷாருக் போன்றவர்களின் கருத்தக்கு ஆதரவாக பேசியுள்ளார். திரையில் புகைப்பிடிக்கும் காட்சிகளையும், மது அருந்தும் காட்சிகளையும் தடை செய்வது இயலாத காரியம் என்று திட்டவட்டமாக அறிவித்திருப்பதுடன், சினிமாவில் கொலை, கொள்ளைகளையும் காட்டுகின்றனர். இவற்றை மட்டும் ஏன் தடுக்கவில்லை என புகை, மதுவுக்கு ஆதரவாக கேள்வியும் எழுப்பியுள்ளார்.

மத்திய அமைச்சரின் இந்த ஆதரவு குரலால் மீண்டும் ரஜினி தனது சிகரெட் ஸ்டைலை திரையில் தொடர்வார் என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கை. நம்பிக்கையை காப்பாற்றுவாரா என்பது எந்திரன் வரும்போது தெரிந்துவிடும்.

அஜித்துடன் நடிக்க நடிகை மறுப்பு


அஜித்துடன் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார் நடிகை மம்தா.

சிவப்பதிகாரத்தில் நடித்த மம்தாவுக்கு சொல்லிக் கொள்ளும்படி தமிழில் வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில், அசல் படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க மம்தாவை அணுகியிருக்கிறார் இயக்குனர் சரண்.

அசலில் சமிரா ரெட்டி பிரதான ஹீரோயின். இரண்டாவது ஹீரோயினாக நடிக்கவே மம்தாவை சரண் கேட்டிருக்கிறார். இரண்டாவது ஹீரோயினாக நடிக்க விருப்பமில்லாததால், அஜித்துடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை மம்தா மறுத்திருக்கிறார்.

இந்தத் தகவலை மம்தாவே பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து சரண் தரப்பிலிருந்து இதுவரை எந்த செய்தியும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதியின் கதையில் மீரா!


'உளியின் ஓசை' படத்துக்குப் பிறகு முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவாகும் புதிய படம் நீ இன்றி நான் இல்லை.

உளியின் ஓசை படத்தைத் தயாரித்த நந்தினி ஆர்ட்ஸ் சார்பில் ஆறுமுகநேரி முருகேசனே இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.

உதய்கிரண் நாயகனாகவும் மீராஜாஸ்மின் நாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்துக்கு தேவா இசையமைக்கிறார். வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி எழுதிய 'சுருளி மலை' கதைதான் சில மாறுதல்களுடன் 'நீ இன்றி நான் இல்லை' என்ற படமாக உருவாகிறது.

அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுத, பி கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இளவேனில் இயக்குகிறார்.

அடுத்தமாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

கமல் படத்துக்காக சென்னை வந்த அசின்


ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னைப் பக்கம் எட்டிப் பார்த்துள்ளார் அசின்.

கமல்ஹாசன் நடிக்கும் '19 ஸ்டெப்ஸ்' படத்தில் நடிப்பதற்காக அவர் சென்னைக்கு வந்துள்ளார்.

குறுகிய காலத்தில் தமிழின் நம்பர் ஒன் நாயகியாக உயர்ந்தவர் அசின். ஆனால் அவருக்கு இந்தியில் அமீர்கானுடன் கஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு வர, இந்த 'நம்பர் ஒன்னை'த் தூக்கி பரணில் போட்டுவிட்டு மும்பைக்கு பறந்தார்.

கஜினி ஓடிய ஓட்டம், அவரை நிரந்தரமாக பாலிவுட்டிலேயே இருத்தி விட்டது. இப்போது மும்பையின் முக்கிய பகுதியில் பெரிய பங்களா வாங்கி செட்டிலாகிவிட்டார் அசின். கைவசம் 3 பெரிய இந்தி புராஜக்ட்டுகள்.

அவர் கஜினியில் நடித்துக் கொண்டிருந்தபோதே ஒப்பந்தமான கமல் நடிக்கும் '19 ஸ்டெப்ஸ்' படம். ஜப்பானின் தாடனோ அஸனோ நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாகத்தான் அசின் நடிக்கிறார். கமல் இதில் கிட்டத்தட்ட கெளரவ வேடத்தில் நடிக்கிறார் என்பதே பொருந்தும்.

இந்தப் படத்தில் களறிச் சண்டை வீராங்கணையாக நடிக்கும் அசின், படத்துக்காக வெகு சிரமப்பட்டு அந்தக் கலையைக் கற்றுக் கொண்டாராம். படப்பிடிப்புக்காக சென்னை வந்தவர், தன் பழைய நண்பர்களிடம் நீண்டநேரம் ஜாலியாகப் பேசி மகிழ்ந்தாராம்.

முருகதாஸின் அடுத்த படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் அசின் என்பது கூடுதல் தகவல்.

மற்றுமொரு நட்சத்திர ஜோடி! காதலும்... மோதலும்...


'புட்டுக்கிச்சாமே...?' அடுத்தவன் பிடில் வாசிக்கும் போதெல்லாம், சந்தோஷமாக ரசிக்கிற கூட்டத்திலிருந்துதான் இந்த கேள்வி. 'அட, சோக ராகம் வாசிக்கும் போதுகூட பீடாவை போட்டு துப்பணுமா? விடுங்கப்பா' என்றால், 'தெய்வீக காதலா இருந்தா நீங்க சொல்றது சரி. இதெல்லாம் சும்மா டைம் பாஸ் லவ் தானே? புட்டுக்கிட்டா என்ன, தொட்டுகிட்டா என்ன?' என்றது அதே பிடில் கோஷ்டி!

எல்லாம் எதை பற்றி? சாந்தனு-சந்தியா காதல் விவகாரம் பற்றிதான்! ஏழு மணிக்கு மேலே மவுண்ட் ரோடு ஓரமாக இருக்கும் அந்த நட்சத்திர ஹோட்டல் பக்கம் போனால், சினிமாவிலே பொழுது போகாத ஒரு கோஷ்டி அங்கே சுத்திட்டு இருக்கும். முன்னெல்லாம் த்ரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா, சிம்பு, விஷால்னு வந்திட்டு இருந்த இடம். இப்போதான் இந்த சின்ன கோஷ்டிங்களோட ஏரியாவாயிருச்சு.

இந்த லவ்வர் ஸ்பாட்டிலேதான் காதலை வளர்த்துகிட்டாங்க சந்தியாவும், சாந்தனுவும். இரண்டு பேருமே அல்மோஸ்ட் ஃபிரியா இருக்கறதாலே இந்த லவ் எக்கச்சக்க வேகத்தோடு எக்குதப்பா வளர்ந்திருச்சு. போன வாரம் இதே ஹோட்டல் லவுஞ்சிலே பயங்கர காச் மூச்! என்னவாம்? சந்தியாவும், சாந்தனுவும் ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிட்டாங்க. இனிமே என் மொகத்திலேயே முழிக்காதேன்னு சொல்லிட்டு இரண்டு பேரும் ஒதுங்கிட்டாங்க. இந்த புட்டுக்கிச்சுக்கு யாரு காரணம்?

உயிர் சங்கீதாவின் தம்பி பரிமள் உடன் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்தாராம் சந்தியா. இது பொறுக்காமதான் இந்த ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்காரு சாந்தனு. ஹ§ம் நாட்ல என்னென்னவோ நடக்குது. இதுவும் நடக்குது...

மூன்றே மாதத்தில் 50 கோடி நஷ்டம்! -சிவசக்தி பாண்டியன் வருத்தம்


தயாரிப்பாளரோட தன்னம்பிக்கையை பாராட்டணும். ஹீரோ, ஹீரோயின் யாருமே வராம தனது படத்தோட ஆடியோ வெளியீட்டு விழாவை வைக்க ஒரு தைரியம் வேணுமே? ஆனா, இந்த துணிச்சல்தான் சினிமா இன்டஸ்ட்ரியில் இன்னொரு அதிரடி முடிவை எடுக்க வைக்கப் போகுது!

மூணார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், இந்த புறக்கணிப்பை கடுமையாக கண்டித்தார். 'இப்படி தனது படத்தோட முக்கியமான விழாவில் கூட கலந்து கொள்ள முடியாமல் வெளியூர்லே இருக்கறதா சொன்னா அதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கெல்லாம் இன்னும் சில வாரங்களில் முடிவு கட்ட போறோம்' என்றார் சூசகமாக!

அப்படியே இன்னொரு அதிர்ச்சி தகவலையும் சொன்னார் சிவசக்தி பாண்டியன். கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை சுமார் 21 படங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. படவுலகுக்கு லாபத்தை தேடி தர வேண்டிய இந்த படங்கள் மூலம் சுமார் 50 கோடி ரூபாய் நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை தயாரிப்பாளர்கள் மட்டுமே தாங்குகிறார்கள். லாபம் வரும்போது எல்லாரும் பங்கு பிரித்துக் கொள்ளும் போது நஷ்டம் வருவதை மட்டும் தயாரிப்பாளர் மட்டும்தான் தாங்க வேண்டும் என்றால் எப்படி? வெற்றியை பங்கு போடுகிறவர்கள், தோல்வியையும் பங்கு போட வேண்டும் என்றார் காரசாரமாக!

கவர்ச்சி மேடையில் சேரன், அமீர்?


'ஆறுமனமே' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா! படத்தில் நிக்கோல், கார்த்திகா என்று இரண்டு நாயகிகள். கார்த்திகா வரவில்லை. ஆனாலும், தனக்கேயுரிய ஸ்டைலோடு வந்திருந்தார் நிக்கோல். அப்படின்னா...? பேருக்கு ஒரு மாராப்பு. பின் முதுகு தெரியுற பிளவுஸ்சுன்னு ஒரே அமர்க்களம்!

'கவர்ச்சி மேடையில் அமீர், சேரன்னு பேப்பர்லே நியூஸ் வரப்போவுது'ன்னு அமீரே சந்தேகப்படுற அளவுக்கு நிக்கோலின் அரசாட்சி! போகட்டும்... இப்படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ்.ராஜன் மலையாளியாம். தனது மகன் தீபக்கை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். தாய் மொழியான மலையாளத்தை விட்டு விட்டு தமிழில் ஏன்? இதற்கான விளக்கத்தை அவரே சொன்னார். 'என்னை கூட நிறைய பேரு இப்படி கேட்டாங்க. ஆனா, மலையாளத்துக்கே தாய் மொழி தமிழ்தான' என்றார் பெருமிதமாக!

'வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்னு சொல்றாங்க. இப்படி சொல்லி சொல்லியே நாங்க அதே இடத்திலே நிக்கிறோம். வந்தங்கள்ளாம் மேலே போயிட்டே இருக்காங்க. இந்த படத்தின் டைரக்டரும், தயாரிப்பாளரும் என்னை சந்திக்க வந்தப்போ ஒரு விஷயத்தை சொன்னாங்க. தயாரிப்பாளர் துபாய்லே ஒரு கம்பெனி நடத்துறாராம். அதிலே மலையாளிகளும், தமிழர்களும் வேலை செய்யிறாங்களாம். மாசா மாசம் சம்பளத்தை வாங்கிக்கிட்டு மலையாளிகள் போயிடுவாங்களாம். ஆனால் தமிழர்கள் மட்டும்தான் கதவை தட்டி உள்ளே வந்து நன்றி சார்னு சொல்லிட்டு போவாங்களாம். இதை சொல்லி அவரு பெருமை பட்டாரு'

'படத்தின் இயக்குனர் சுதீஷ் சங்கர், சேது மாதவனிடம் உதவி இயக்குனராக இருந்தவர்னு சொன்னாங்க. அந்த நேர்மை இப்போ பார்த்த பாடல் காட்சிகளில் தெரிஞ்சுது' என்றார் இயக்குனர் சேரன்.

இந்த படம்ட நல்லா ஓடணும்னு மாரியாத்தா, காளியாத்தா, ஏசு, அல்லா எல்லாரையும் வணங்கிக்கிறேன்னு வெள்ளந்தியா பேசிட்டு உட்கார்ந்தாரு கஞ்சா கருப்பு. படத்திலே இவருக்கு முக்கிய வேடமாம்!

வில்லனாகிறார் ஆர்யா!


தொடர்ந்து மூன்று வருடங்களாக படம் இல்லாமல் இருந்தது, திடீர் சம்பள குறைப்பு, பாலா படத்திற்காக வாங்கிக் கொடுத்த கடன் என்று ஆர்யாவை சுற்றி ஆயிரம் கம்பளிப்பூச்சுகள்! சரிவிலிருந்து மீளவும், சங்கடத்திலிருந்து தப்பிக்கவும் ஆர்யா எடுத்த முடிவுதான் வில்லன் வேஷம்!

அட, இதென்ன புதுக்கதை? தமிழில் தொடர்ந்து ஹீரோவாகதான் நடிப்பார். ஆனால், தெலுங்கு படம் ஒன்றில் மட்டும் வில்லனாக நடிக்கிறாராம். இதற்காக அவருக்கு தமிழ் படத்திற்கு இணையான சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறதாம். தமிழில் ஹீரோவாக நடிக்கும் போது திடீரென்று வில்லன் வேடத்தை ஒப்புக் கொண்டால் இமேஜ் அதள பாதாளத்திற்கு தள்ளப்படுமே?

இதையெல்லாம் யோசிக்காமலா வில்லனாவார்? தெலுங்கு அக்ரிமென்ட்டில் கையெழுத்து போடும்போதே இந்த படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையும் போட்டாராம். இதற்கு ஒப்புக் கொண்ட பிறகுதான் அட்வான்சையே கைநீட்டி வாங்கினாராம். படத்தின் ஹீரோ யார்? இயக்குனர் யார்? என்பதெல்லாம் போக போக தெரிய வரும்!

Monday, June 1, 2009

தினமும் போன் செய்து என்னை இம்சித்த 55 வயது ரசிகர் - சோனா


சிலப்பதிகாரம்” படம் மூலம் நடிகையான சோனா “பத்துபத்து” “குசேலன்” என தமிழ், தெலுங்கு மலையாளத்தில் 30 படங்கள் நடித்து விட்டார்.
கவர்ச்சியில் தொடர்ந்து கலக்கி வரும் சோனா சொல்கிறார்:- என் வாழ்க்கை நல்லா போய்ட்டு இருக்கு. இப்போ தயாரிப்பாளர் ஆகி இருக்கேன். கதை, இயக்குனர், தேர்வு செய்துவிட்டு வர்றோம். அழுமூஞ்சியா இல்லாமல் கலகலப்பான கமர்ஷியல் கதையை படமாக்கபோறேன். தயாரிப்பாளர் ஆனதால் இனி நடிக்க மாட்டேன் என சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. சினிமாவில் இருந்துதான் இவ்வளவு பிரபலமானேன். எனவே சினிமாவை விடமாட்டேன். தொடர்ந்து நடிப்பேன்.

அதே வேளை நான் தயாரிக்கும் படங்களில் நடிக்கமாட்டேன். ஷில்பா ஷெட்டியை வைத்து சென்னையில் நான் திறந்த “யுனிக்” கடையில் வியாபாரம் நல்லா நடக்குது. இன்னொரு கிளை துவங்கப்போறேன். அலங்கார பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை வைத்து இருக்கிறேன். அவற்றை விற்பனை செய்யும் கடையொன்றையும் விரைவில் திறக்க உள்ளேன்.

ஒரு ரசிகர் எனக்கு தினமும் போன் செய்து இம்சித்தார். “பத்து பத்து” படத்தில் இருந்து ரசிகராக இருப்பதாக சொன்னார். என்னை சந்திக்க ஆவலாக இருப்பதாகவும் கூறினார். நான் சந்திக்காமல் தவிர்த்து வந்தேன். ஆனாலும் அவர் விடவில்லை. உங்கள் தீவிர ரசிகன் பார்க்க வேண்டும் என்று தொல்லை கொடுத்தார். அவருக்கு சொந்த ஊர் திருத்தணி. வேறு வழியின்றி அழைத்தேன். நேரில் பார்த்த போதுதான் தெரிந்தது. அவருக்கு 55 வயது என்று. திருத்தணி கோவிலில் இருந்து பஞ்சாமிர்தமும் வாங்கி வந்திருந்தார்.

கதாநாயகியாக நடிக்க முடியாத வருத்தம் எனக்கு இருக்கு. இப்போது எடை கூடி விட்டது. இனி ஆசைப்படமுடியாது. நீச்சல் உடையில் தொடர்ந்து நடிப்பேன். நீச்சல் உடையை எல்லோருமே பயன்படுத்துகிறார்கள். சினிமாவில் அதை உடுத்த மாட்டேன் என்று சில நடிகைகள் சொல்வது ஏற்புடையதாக தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சோனா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள வீட்டில் பிளவர் பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்குகிறார்.

ஜெமினி - ஆறிலிருந்து எண்பத்தி ஐந்து வரை


ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறை அவரது மூத்த மகள் கமலா செல்வராஜ் ஒன்றரை மணி நேர படமாக எடுக்கிறார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார்.

ஜெமினி கணேசன் ஆறு வயது முதல் அவர் மரணமடைந்த 85வது வயது வரை உள்ள வாழ்க்கை இந்தப் படத்தில் பதிவு செய்யப்படுகிறது. ஜெமினி கணேசனுடன் நெருங்கிப் பழகிய முப்பது பேர்களின் பேட்டியும் இதில் இடம்பெறுகிறது.

ஆவணப்பட பாணியில் தயாராகும் இந்தப் படத்தை வெங்கடேஷ் இயக்குகிறார். தாயன்பன் இசை. படத்தக்கு காதல் மன்னன் என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்தார் டாக்டர் கமலா செல்வராஜ்.

மழையால் முரட்டு சிங்கம் பாதிப்பு


தென் தமிழகத்தில் பெய்த கடும் மழையால் சிம்புதேவனின் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படப்பிடிப்பு தடைபட்டது.

சிம்புதேவனின் கெளபாய் படம், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படப்பிடிப்பு பாலக்காட்டில் தொடங்கியது. லாரன்ஸ், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்கள் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக அம்பாசமுத்திரத்தில் சுமார் ஒரு கோடி ரூயாய் செலவில் அரங்குகள் அமைக்கப்பட்டன. தற்போது இங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இரண்டு நாட்கள் முன்பு பெய்த கடும் மழையால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் முழுமையாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. அதே நேரம் மழையால் அரங்குகளுக்கு எதுவும் சேதமில்லை என பட யூனிட்டில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

லாரன்ஸ் ஜோடியாக பத்மப்ரியா, லட்சுமிராய், சந்தியா ஆகியோர் நடிக்கின்றனர். மனோரமா, நாசர், மெளலி ஆகிய சீனியர் நடிகர்களும் படத்தில் இருக்கிறார்கள். சுமார் 28 வருடங்களுக்குப் பிறகு தமிழில் தயாராகும் கெளபாய் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேலுவின் புதிய ஜோடி


வடிவேலு என்றதும் நினைவுக்கு வருகிறவர் கோவை சரளா. சராளவிடம் சரமாரியாக வடிவேலு அடிவாங்கும் காட்சியை முதல் முறையாக வி. சேகர் தொடங்கி வைத்தார். அதை புள்ளியாக வைத்து பெரிய கோலமே போட்டார்கள் கோடம்பாக்க இயக்குனர்கள்.

ஒரு கட்டத்தில் இந்த அடிதடி காமெடி வடிவேலு, கோவை சரளா இருவருக்குமே சலித்தது. பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

இந்நிலையில் புதிய ஜோடி ஒன்றை தேடியிருக்கிறார் வடிவேலு. குசேலன் படத்தில் சோனாவுடன் இவர் செய்த காமெடிக்கு நல்ல வரவேற்பு. அதனால் அழகர்மலை படத்திலும் சோனாவையே தனது ஜோடியாக்கியிருக்கிறார் வடிவேலு.

ஒரு படத்துக்கு மூன்று, நான்கு என்று நாட்களை எண்ணி கால்ஷீட் கொடுக்கும் வடிவேலு, அழகர்மலை படத்துக்கு இருபது நாட்களுக்கு மேல் கால்ஷீட் தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். எல்லாம் சோனா ஜோடி சேர்ந்த நேரம்.

கம்பு சுற்றும் கதாநாயகி

அழகும், கவர்ச்சியும் அதனை தாராளமாக வெளிப்படுத்தும் பரந்த மனசும் இருந்தால் போதும், தமிழ் சினிமாவில் நாயகியாகிவிடலாம். திறமை...? அது யாருக்கு வேண்டும்!

இந்த கவர்ச்சி கால்குலேசனுக்கு நடுவில், அழகு நிலையத்துக்குப் போகாமல் உடற்பயிற்சி நிலையத்துக்கு சென்று கொண்டிருக்கிறார் ஒரு நடிகை. அவர், வள்ளுவன் வாசுகியில் நடித்த ஸ்வேதா.

மரத்தைச் சுற்றி பாட்டுப் பாடும் நாயகிகளுக்கு எப்போதாவது உடம்பை வருத்தி 'டைட்' பண்ணும் சந்தர்ப்பம் கிடைக்கும். வீரசோழன் படத்தில் அப்படியொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது ஸ்வேதாவுக்கு.

ஸ்ரீ முத்துமாரியம்மன் பிலிம்ஸ் தயாரிக்கும் வீரசோழன் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாராகிறது. அன்பு சரவணன் படத்தை இயக்குகிறார். அஜய்குமார் என்ற புதுமுகம் ஹீரோ. ஸ்வேதா ஹீரோயின்.

இந்தப் படத்தில் வீரம் நிறைஞ்ச பெண்ணாக வருகிறார் ஸ்வேதா. பாவாடையை இழுத்துச் செருகி கம்பெல்லாம் சுற்றுகிறாராம். இதற்காக ஸ்வேதாவுக்கு ஸ்பெஷல் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.

சரித்திரம் படத்துக்காக ஸ்ரீதேவிகா சிலம்பப் பயிற்சி எடுத்துக் கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆஸி. சம்பவங்கள்-அமிர் கவலை


ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியினர் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவது தன்னை பெரிதும் பாதித்துவிட்டதாகக் கருத்து தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் அமிர் கான்.

இந்த தாக்குதல்களுக்கு தனது கண்டனத்தைத் தெரிவிக்கும் பொருட்டு, தனக்கு ஆஸ்திரேலிய அமைப்பு வழங்கிய டாக்டர் பட்டத்தையே புறக்கணித்தார் அமிதாப் பச்சன். இப்போது அமீர் கானும் தன் பங்குக்கு எதிர்ப்பைக் காட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது ப்ளாக்கில் அவர் எழுதியிருப்பதாவது:

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவது அவமானகரமான விஷயமாக உள்ளது. இவற்றை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் ஆஸ்திரேலியா உடனே இறங்க வேண்டும்.

இதனால், எல்லா ஆஸ்திரேலியர்களும் இனவெறி பிடித்தவர்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால் ஒருமுறை இருமுறை அல்ல... பலமுறை இம்மாதிரி தாக்குதல்கள் நடந்துள்ளன.

நம் நாட்டினரைத் தாக்குகிறார்களே என்பதற்காக அந்நிய நாட்டுக்கார்கள் யாரையும் இந்தியர்கள் தாக்கிவிடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அமீர்.

சிரஞ்சீவி சினிமாவை நம்பி தோற்றார்-ஜீவிதா


சினிமா புகழ் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் சிரஞ்சீவி அரசியலில் குதித்தார். ஆனால், அதில் அவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது என நடிகை ஜீவிதா தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தவர் நடிகை ஜீவிதா. நடிகர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்ட அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. நடிகர் சிரஞ்சீவியின் பிரஜ்ஜா ராஜ்யம் கட்சி குறிப்பிடத் தகுந்த ஓட்டுக்களை பெற்ற போதிலும் 18 சட்டசபை சீட்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

இந் நிலையில் ஜீவிதா நிருபர்களிடம் பேசுகையில்,

சிரஞ்சீவி சினிமாவில் தனக்கு இருக்கும் புகழை நம்பி அரசியலுக்கு வந்து ஏமாந்துவிட்டார். அவரது சினிமா கவர்ச்சி ஆந்திர மக்களிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

சினிமா நடிகர், நடிகைகளை தற்போதைய மக்கள் வேடிக்கை பார்க்க தான் வருவார்கள். ஆனால் அவர்களுக்கு வாக்களிக்க முன்வர மாட்டார்கள். மக்களிடம் யார் நெருக்கமாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு தான் ஓட்டு விழும். சிரஞ்சீவியால் அது முடியாது.

அவர் மக்களுடன் நெருங்கி பழகமாட்டார். அவரை நினைத்தாலும் அவரை சுற்றி இருக்கும் விஐபி கூட்டம் அதை தடுத்து நிறுத்திவிடும். இதனால் அவருக்கும் கட்சியின் அடிமட்டத்தில் இருக்கும் தொண்டர்களின் மனநிலை, மன ஓட்டம் எதுவும் தெரியாது.

அவர் தனது சினிமா கவர்ச்சியை மட்டுமே நம்பி தேர்தலில் களமிறங்கினார். அதனார் தான் தோற்றுபோனார் என்றார் ஜீவிதா.

நான் அழகில்ல!- மம்தா மோகன்தாஸ்


அழகான தென்னிந்திய நடிகைகளுள் ஒருவர் என எல்லாரும் மம்தா மோகன்தாஸைப் பாராட்ட, அவரோ வேறு ஒருவருக்கு அந்த சர்ட்டிபிகேட்டைத் தருகிறார்.

யார் அந்த அழகி தெரியுமா?

விவேக் தானாம்..

'அட உண்மைதாங்க... சமீபத்தில் நானும் விவேக்கும் குரு என் ஆளு படத்துல ஒரு காட்சியில் சேர்ந்து வருவோம். அந்தக் காட்சியில் பெண் வேடத்தில் வருவார் விவேக். உண்மையில் அந்தக் காட்சியில் அவரது தோற்றம் பார்த்து அசந்துவிட்டேன்.

எனக்கே நான் அழகா இருக்கேனா இல்லையான்னு சந்தேகம் வந்துடுச்சி. அவர்கிட்ட நான் இப்படிச் சொன்னேன்... 'என்னை விட இப்போ நீங்கதான் அழகா இருக்கீங்க'ன்னு!", என்கிறார் மம்தா.

விவேக்கின் காமெடிக்கு பெரிய ரசிகையாம் மம்தா. முதல்முறை அவரைச் சந்தித்தபோது, ஹலோ என்று விவேக் கை நீட்ட, இவர் பதிலுக்கு கை கொடுக்காமல் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டே இருந்தாராம்.

நிருபர்களுடன் ரம்யா வாக்குவாதம்-மோதல்


பெங்களூர் நடந்த பத்திதிரிகையாளர் சந்திப்புக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்த நடிகை ரம்யா, அவர்களுடன் வாக்குவாதத்தில் இறங்கினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழில் குத்து படம் மூலம் அறிமுகமானவர் ரம்யா. இவர் பொல்லாதவன், வாரணம்ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பெங்களூரை சேர்ந்த இவர் தற்போது கன்னடத்தில் படு பிசியாக இருக்கிறார்.

முன்னாள் கர்நாடக முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் நெருங்கிய உறவினரான இவர் சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மாண்டியா தொகுதியில் நிறுத்தப்படலாம் என்ற பேச்சும் அடிபட்டது.

இந்நிலையில் நேற்று பகல் 1 மணிக்கு இவர் நடிகர் பிரேமுடன் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் ஜொதெகார என்ற கன்னட படம் தொடர்பான நிருபர்கள் சந்திப்பு பெங்களூர் நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

1 மணிக்கு பத்திரிகையாளர்கள், கதநாயகன் பிரேம், தயாரிப்பாளர் அஸ்வினி ராம்பிரசாத் உள்ளிட்ட படக் குழுவினர் வந்துவிட்டனர். ஆனால் நடிகை குத்து ரம்யா வரவில்லை.

அவருக்கு தயாரிப்பாளர் போன் செய்த போது விரைவில் வந்துவிடுவதாக தெரிவித்தார். வெகு நேரமாகியும் அவர் வரவில்லை. மீண்டும் இரு முறை அவரிடம் பேசியபோதும் ஒரே பதிலை தான் தெரிவித்தார்.

இதையடுத்து சுமார் 1 மணி நேரம் கழித்து அங்கு வந்தார்.

வந்த வேகத்தில் அவருக்காக காத்திருந்தவர்களிடம் சிறிய வருத்தம் கூட தெரிவிக்காமல் பேசத் தொடங்கினார். இதையடுத்து கூட்டத்துக்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள் சிலர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்த ரம்யா,பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடக்கிறது என்பது குறித்து எனக்கு தகவல் கொடுக்கப்படவில்லை. எனக்காக யாரும் காத்திருக்க வேண்டாம் என நான் அப்போதே தயாரிப்பாளிடம் கூறிவிட்டேன். இன்று ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நான் என்பதால் இங்கு சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்று தான் வந்தேன்.

நீங்கள் என்னிடம் கேட்பதற்கு எதுவும் இல்லை. எது கேட்பதாக இருந்தாலும் அதை தயாரிப்பாளர் ராம்பிரசாத்திடம் தான் கேட்க வேண்டும். நான் யாரிடமும், எதற்கும் வருத்தம் தெரிவிக்க வேண்டியதில்லை.

என்னை பற்றி ஒன்றும் எழுத வேண்டிய அவசியமில்லை. விருப்பம் இருந்தால் இங்கே இருங்கள். இல்லையென்றால் புறப்பட்டு செல்லுங்கள் எனறார் ரம்யா. இதையடுத்து நிருபர்கள் அனைவரும் கோபத்துடன் வெளியேறிவிட்டனர்.

நிருபர்கள் மற்றும் நடிகை ரம்யா இருவரையும் தயாரிப்பாளர் ராம்பிரசாத் சமாதானம் முயன்றார். ஆனால் அதற்கு போதிய கிடைக்கவில்லை. அவர்கள் நடிகை ரம்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

அதன் பின்னர் வெளியே வந்த நடிகை ரம்யா கூறுகையில், கூட்டத்தில் நிருபர்கள் தான் முதலில் ஆவேசமாக பேசினார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது எனறார் ரம்யா.

சிரு மகனுடன் ஜெனீலியா


தமிழ், தெலுங்கு, இந்தி என ஷன்டிங் அடித்து வரும் ஜெனீலியா, இந்தியில் பிசியாக உள்ள நிலையிலும் இப்போது சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜாவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

மும்பையிலிருந்து தமிழுக்கு வந்தவர் ஜெனீலியா டிசவுசா. முதலில் ஹரிணி என்ற பெயரில் நடித்தார். பின்னர் ஒரிஜினல் பெயருக்கே மாறி விட்டார்.

தமிழில் ராசியில்லாத நடிகையாக அறியப்பட்டதால் தெலுங்குக்கு இடம் பெயர்ந்தார். பின்னர் இந்திக்குத் தாவி விட்டார். அங்கு முதல் படமே ஹிட் ஆகவே தமிழ், தெலுங்கிலும் ஜெனீலியாவுக்கு புது அந்தஸ்து கிடைத்தது.

இதையடுத்து இப்போது தெலுங்கு, இந்தி என மாறி மாறி நடித்து வருகிறார். தமிழிலும் சில வாய்ப்புகள் பேச்சுவார்த்தையில் உள்ளதாம்.

தெலுங்கில் ஹிட்டான பொம்மரிலு தமிழில் சந்தோஷ் சுப்ரமணியம் என்ற பெயரில் வெளியாகி அதுவும் சூப்பர் ஹிட் ஆனது. இப்போது பொம்மரிலுவை இயக்கிய பாஸ்கர், அடுத்து இயக்கப் போகும் புதிய தெலுங்குப் படத்திலும் ஜெனீலியா நடிக்கிறார். இதில் அவருடன் ஜோடி போடுவது சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா. நம்ம ஊர் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைப்பாளர்.

தொடர்ந்து இளம் நடிகர்களுடனேயே நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதால் படு சந்தோஷமாக இருக்கிறாராம் ஜெனீலியா.

Sunday, May 31, 2009

ரீமிக்ஸ் பண்ணுறேன்னு கொல்றாங்க...வடிவேலு ஆவேசம்!


தமிழ்சினிமாவில் ரீமிக்ஸ் என்ற பெயரில் நடைபெறுகிற 'இசை வதையை' கண்டிக்காத பிரபலங்களே இல்லை எனலாம். "அடுத்தவர் வாந்தியை சுவைப்பது போலதான் இந்த ரீமிக்ஸ்" என்று கடுமையான வார்த்தைகளால் சாடி இருந்தார் இசைஞானி இளையராஜா. "இனிமேல் ரீமிக்ஸ் செய்யப் போவதில்லை" என்று அறிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இதோ - திரையுலகத்திலிருந்து ரீமிக்ஸ் கலாச்சாரத்தை நோக்கி மேலும் ஒரு கல்! எறிந்திருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைகைப்புயல், சற்று வேகமாக சுற்றி அடித்தது வார்த்தைகளை!

தமிழ்சினிமாவில் தற்போது ஓரிரு படங்களுக்கு இசையமைத்துவிட்டாலே பெரிய இசை மேதை போல சுற்றி வருபவர்களுக்கு முன் எவ்வளவோ சாதனைகளை செய்து விட்டு அடக்கமாக இருக்கிறாரே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்... அவர் ஒரு இமயம். இவர்களை போன்றவர்கள் இரவு பகல் பாராமல் இசையமைத்த பாடல்களை கூசாமல் எடுத்து ரீமிக்ஸ் என்ற பெயரில் கெடுத்து கொல்வது வேதனையாக இருக்கிறது. இந்த கொடுமைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். தயவு செய்து இப்படி அடுத்தவர்களின் உழைப்பை திருடாதீர்கள். முடிந்தால் நீங்களே சுயமாக சிந்தித்து இசையமையுங்கள். அதை சிறிது காலம் கழித்து நீங்களே ரீமிக்ஸ் செய்து கொள்ளுங்கள். யார் கேட்க போகிறார்கள்? என்றார் ஆவேசமாக!

இசையமைச்சவங்க சொல்லியே கேட்கலே, இவரு சொல்லியா கேட்க போறாங்க. விடுங்க சார்...

நிறுவன தலைவராக விஜய்! கட்சி வேலைகள் பரபர...


அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் விஜய் என்று கிளம்பிய கிசுகிசுவை தொடர்ந்து அவரை நேரில் சந்திக்கும் போது, அப்படியா? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள் நிருபர்கள். அவர்களுக்கெல்லாம் விஜய் சொல்கிற ஒரே பதில், "என்னுடைய பிறந்த நாளான ஜுன் 22 ந் தேதி வரைக்கும் பொறுத்திருங்க. நல்ல செய்தி சொல்றேன்" என்பதுதான்.

கட்சி துவங்குகிற விஷயத்தை தவிர வேறென்ன நல்ல செய்தியை சொல்லிவிடப் போகிறார்? இன்னொரு அதிகாரபூர்வமான செய்தியும் உலா வருகிறது. கட்சியின் நிறுவன தலைவராக மட்டுமே விஜய் இருப்பாராம். (பா.ம.க வில் ராமதாஸ் எப்படியோ, அப்படி!) நேரடியாக தலையிட மாட்டார். பொதுச்செயலாளர், தலைவர் என்ற முக்கிய பொறுப்புகளை அவரது அப்பா எஸ்.ஏ.சி பார்த்துக் கொள்வாராம்.

இப்போது எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்கு தாவியிருக்கிறார் விஜய். அதை நிரூபிக்கும் விதமாக வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடல். எழுதியிருப்பவர் கபிலன். "உணவு உடை இருப்பிடம் உழவனுக்கு கிடைக்கணும். அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கே படைக்கணும்" இந்த வரிகளை கேட்டவுடன் சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் குதித்த விஜய், கபிலனை நேரில் வரச்சொல்லி பாராட்டினாராம். அப்படியே சால்வை போட்டு ஒரு பொற்கிழியும் கொடுத்திருந்தால், அரசியல் தலைவர் 'களை' வந்திருக்கும். ஹ§ம்....?

கொ.ப.செ பதவியை யாராவது நடிகைக்கு கொடுத்தால் கலகலப்பா இருக்கும்ங்கிறது நம்ம யோசனை!

மீடியா அது பற்றி கொஞ்சம் யோசிக்கணும்! நயன்தாரா அட்வைஸ்...


'பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள்' என்று எல்லா பத்திரிகைகளும் எழுதிவிட்டன. (நம்மை தவிர) இது குறித்து எந்த பதிலுமே சொல்லவில்லை சம்பந்தப்பட்ட இருவரும். முக்கியமாக பிரபுதேவா கூட இது பற்றி கருத்து சொல்ல விரும்பாமல் ஒதுங்கிக் கொண்டார். மீனாவை காதலிக்கிறார் என்று முன்பு ஒரு முறை கிளப்பிவிட்ட பத்திரிகைகள் தானாகவே அடங்கி போகிற வரை அதுபற்றி அவர் பேசியதில்லை. அதே ஸ்டைலைதான் இந்த முறையும் கடைபிடித்தார்.

ஆனால் பிரபுதேவா பேசாவிட்டால் என்ன? நாம் பேசிவிடுவோம் என்று முடிவுக்கு வந்த நயன்தாரா, ரொம்ப தெளிவாக விளக்கியிருக்கிறார். என்னவென்று?

'நானும் அவரும் நல்ல நண்பர்களாகதான் பழகி வருகிறோம். எங்களுக்குள் காதல், கல்யாணம் என்று வித விதமாக எழுதி புழுதியை தூற்றுகிறது மீடியா. என்னை எழுதுவது பற்றி கூட எனக்கு கவலையில்லை. ஆனால் மாஸ்டருக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் என்று ஒரு குடும்பம் இருக்கிறது. அதற்காகவாவது இதுபோல எழுதுவதை இனிமேல் குறைத்துக் கொள்ள வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.

இந்த ஆகாத லவ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைங்கப்பா...!

யு.எஸ்-29 வயது வாலிபருக்கு 11 மனைவிகள் மூலம் 21 குழந்தைகள்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் 29 வயது வாலிபர் ஒருவர் 11 மனைவிகளின் மூலம் 21 குழந்தைகள் பெற்று அதிர வைத்துள்ளார்.

அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தை சேர்ந்தவர் டெஸ்மாண்ட் ஹாட்செட். தற்போது இவருக்கு 29 வயது தான் ஆகிறது. ஆனால், அதற்குள் இவர் 11 மனைவிகள் மூலம் 21 குழந்தைகள் பெற்றுள்ளார்.

இவருக்கு இரண்டு முறை ஒரே ஆண்டில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. இவரது மூத்த குழந்தைக்கு 11 வயதாகிறது. கடைசி குழந்தைக்கு 11 மாதம் மட்டுமே ஆகிறது. குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வருவதால் இவரால் அனைத்து குழந்தைகளையும் பராமரிக்க முடியவில்லை.

இதையடுத்து அவரது மனைவிகளில் சிலர் நீதிமன்றத்தில் சென்று வழக்கு தொடர்ந்தனர். அதன் பின்னர் தான் இவருக்கு 21 குழந்தைகள் இருக்கும் செய்தி வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. இவரை அமெரிக்க பத்திரிகையாளர் சாதனையாளர் என கிண்டலடித்து வருகின்றன.

இந்நிலையில் நீதிமன்றம் அவரது சம்பளத்தில் பாதியை குழந்தைகளுக்கு செலவிட உத்தரவிட்டுள்ளது. ஆனால் டெஸ்மாண்டின் சம்பளம் மிகவும் குறைவு என்பதால் ஒரு குழந்தைக்கு சுமார் ரூ. 100க்கும் குறைவாக மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது.

இதையடுத்து மாநில அரசு தலையிட்டு அந்த குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என டெஸ்மாண்டின் வக்கீல் கெய்த் போப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து டெஸ்மாண்ட் கூறுகையில்,

நான் சாதனை எதையும் படைக்க விரும்பவில்லை. இதனால் இனி குழந்தை பெற்று கொள்ள மாட்டேன். நான் வேண்டுமென்றே இதை செய்யவில்லை. அது தானாக நடந்துவிட்டது. எனது ஒவ்வொரு மனைவிக்கும் எனக்கு மேலும் சில குழந்தைகள் இருப்பது தெரியும்.

எனது 21 குழந்தைகளின் பெயர், வயது மற்றும் பிறந்தநாள் ஆகியவற்றை என்னால் மறக்காமல் சொல்ல முடியும் என்றார் பெருமை பொங்க.

ஆஸி. இனவெறி-டாக்டர் பட்டத்தை நிராகரித்த அமிதாப்


டெல்லி: ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது நடந்த அடுத்தடுத்த இனவெறித் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து, ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்று தனக்கு அளிக்க முன்வந்த கெளரவ டாக்டர் பட்டத்தை சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நிராகரித்து விட்டார்.

உலக பொழுதுபோக்குத் துறைக்கு அமிதாப் பச்சன் ஆற்றிய சேவையைப் பாராட்டி குவீன்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், அமிதாப் பச்சனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிப்பதாக அறிவித்திருந்தது. ஜூலை மாதம் இந்த பட்டம் வழங்கும் விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதை தற்போது அமிதாப் நிராகரித்து விட்டார்.

இதுகுறித்து அவர் தனது பிளாக்கில் எழுதியுள்ளார். அதில்,

மிகுந்த அதிர்ச்சியுடனும், வேதனையுடனும் நான் இந்தியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் [^] மீது நடத்தப்பட்டு வரும் இந்த சம்பவங்கள் டிவிகளில் தினசரி ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், என்னால் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் ஒன்று அளிக்கும் கெளரவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. எனது நாட்டு மக்கள் அங்கு அவமானப்படுத்தப்பட்டு, மனிதாபிமானமே இல்லாத வகையில் தாக்கப்படும்போது அதை என்னால் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது. அதை மறந்து விட்டு, என்னால் அந்த நாட்டில் தரப்படும் விருதை பெற முடியாது.

எனது நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடந்து வரும் ஒரு நாட்டிடமிருந்து நான் கெளரவ டாக்டர் பட்டத்தைப் பெறுவதற்கு எனது மனசாட்சி அனுமதி தரவில்லை என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.

தோரணை- பட விமர்சனம்


நடிகர்கள்: விஷால், ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ், சந்தானம், கிஷோர், ஷாயாஜி ஷிண்டே, லால்
ஒளிப்பதிவு: ப்ரியன்
இசை: மணி ஷர்மா
இணை தயாரிப்பு: ஸ்ரேயா ரெட்டி
தயாரிப்பு: ஜிகே பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் விக்ரம் கிருஷ்ணா
இயக்கம்: சபா அய்யப்பன்
மக்கள் [^] தொடர்பு: நிகில் முருகன்

சத்யம் [^] சறுக்கலைச் சரிகட்ட விஷால் மிகவும் மெனக்கெட்டு உருவாக்கியதாகச் சொன்ன படம் தோரணை.

சின்ன வயதில் வீட்டை விட்டு ஓடி சென்னை [^] வந்துவிட்ட அண்ணனைத் தேடி வருகிறார் தம்பி விஷால். தேடிப் பார்த்த பிறகுதான் தெரிகிறது அவர் சென்னை நகரையே கலக்கும் தாதாக்களில் ஒருவர் என்றும், இன்னொரு ரவுடி பிரகாஷ் ராஜால் உயிருக்கு குறி வைக்கப்பட்டிருக்கும் விவரமும்.

பிரகாஷ் ராஜிடமிருந்து அண்ணனைக் காப்பாற்றி எப்படி தன சொந்த ஊருக்கு அழைத்துப் போகிறார் விஷால் என்பதை கலகலப்பாக சொல்ல முயன்றுள்ளார் புதிய இயக்குநர் சபா அய்யப்பன். ஆனால் அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த புதிய விஷயத்தையும் அவர் செய்யவில்லை என்பதுதான் குறை.

'மலைக் கோட்டை' மாதிரி ஒரு காமெடி ஆக்ஷன் பார்முலாவை இந்தப் படத்தில் அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் பார்த்த காட்சிகள், எதிர்பார்க்கக் கூடிய திருப்பங்கள் என நகர்கிறது கதை.

அதேநேரம் ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்ளவும் வேண்டும்... பாடல் காட்சிகளைத் தவிர மற்ற காட்சிகள் பெரும்பாலும் போரடிக்கவில்லை. குறிப்பாக சந்தானம் முடிந்த வரை கிச்சு கிச்சு மூட்டுகிறார். பொழுது போகிறது.

ஒரு ஆக்ஷன் கதாநாயகனுக்கே உரிய அத்தனை விஷயங்களையும் குறைவில்லாமல் செய்துள்ளார் விஷால். சண்டைக் காட்சிகளில் இன்னும் எந்தளவு வனமுறையைக் காட்டப் போகிறார்களோ தெரியவில்லை. பார்க்கும் நமக்கே உடம்பு வலிக்கிறது.

ஸ்ரேயாவுக்கு உடனடித் தேவை போஷாக்கான ஆகாரம்... விஷால் கொஞ்சம் இழுத்து அணைத்தாலும் ஒடிந்துவிடுவாரோ எனும் அளவுக்கு ஒல்லிப்பிச்சானாக வந்து கொல்லுகிறார்.

கிஷோர் நல்ல நடிகர்தான்... ஆனால் படத்தில் அவருக்கும் சேர்த்து விஷாலே பேசி விடுவதால், பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருப்பதோடு அவர் வேலை முடிந்துவிடுகிறது.

பிரகாஷ் ராஜ் வழக்கமான வில்லன். சில காட்சிகள் என்றாலும் கமிஷனராக வரும் லால் நடிப்பு நச். அவர் அறிமுகமாகும்போதே தெரிந்துவிடுகிறது 'ரொம்ப நல்ல போலீஸ்' என்று!

சந்தானம் பெருமளவு படத்தைக் காப்பாற்றுகிறார். வசன உச்சரிப்பில் இனி கவுண்டர் பாணிதான் கைகொடுக்கும் என தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார். மயில் சாமியும், பரவை முனியம்மாவும் அவருக்கு கை கொடுத்திருக்கிறார்கள்.

கீதா, ஷாயாஜி ஷிண்டே, பாலாசிங் போன்றவர்களும் வந்து போகின்றனர்.

படம் முழுக்க யாராவது ஒருவர் தோரணை என்ற வார்த்தயை உச்சரித்துக் கொண்டே இருப்பது கடுப்படிக்கிறது.

மணிஷர்மாவின் இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை. அந்த காஷ்மீர் பாடலின் லொக்கேஷன்கள், ஒளிப்பதிவு அசத்தல். மற்றபடி வெறும் கார்களின் உறுமலும், டமடம ட்ரம்ஸ் சத்தமும்தான் இந்தப் படத்தின் பின்னணி இசை!

படத்துக்காக விஷால் பேட்டி கொடுத்த தோரணையைப் பார்த்துவிட்டுப் போனதாலோ என்னமோ நமக்கு ஏமாற்றம்தான்...

இனி எல்லா ஆக்ஷன் பட இயக்குநர் [^]களுமே தலைப்புடன் தவறாமல் ஒரு 'டேக் லைன்' சேர்க்கலாம், "தயவு செய்து லாஜிக் பார்க்கவே பார்க்காதீர்கள்" என்று!

நகைச்சுவைக் காட்சிகளுக்காக ஒரு முறை பார்க்கலாம்!

பாடத் துடிக்கும் மீரா


வால்மீகு நாயகி மீரா நந்தனுக்கு பாட்டுப் பாடும் ஆசை வந்து விட்டது. இசைஞானியிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறாராம். எனவே அடுத்த படத்திலேயே இசைஞானியின் இசையில் பாட வாய்ப்பு வரும் என்று பெரும் நம்பிக்கையுன் உள்ளார் மீரா.

நாயகர்களும், நாயகிகளும் பாட்டுப் பாடி நடிப்பது அந்தக் காலம். இப்போதெல்லாம் வசனம் பேசுவதற்கே வேறு வாயைத் தேடும் நிலை. காரணம், தமிழ் தெரிந்த நடிகைகள் மிக மிகக் குறைவாக இருப்பதால்.

இந்த நிலையில் சில நடிகைகளுக்கு நல்ல குரல் வளம் இருப்பதால் நடிப்பதோடு பாட்டுப் பாடவும் வாய்ப்பு இருந்தால் அதையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

மலையாளத்து மம்தா மோகன்தாஸ், நடிப்போடு பாடவும் செய்கிறார். தெலுங்கில், தேவிஸ்ரீபிரசாத்தின் இசையி்ல இவரது பாடல் கண்டிப்பாக இடம் பெறும். தமிழிலும் கூட பிரசாத்தின் இசையில், வில்லு படத்தில் ஒரு பாட்டுப் பாடியுள்ளார்.

கிட்டத்தட்ட தொழில்முறைப் பாடகியாகவே மாறி வருகிறார் மம்தா.

இந்த வரிசையில் விரைவில் மீரா நந்தன் இணைவார் போலத் தெரிகிறது. இவரும் மலையாளம்தான். தமிழில் வால்மீகி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

நல்ல குரல் வளத்துடன் காணப்படும் மீரா, பாட ஆசையோடு உள்ளார். அதிலும் இளையராஜா இசையில்தான் தனது முதல் பாடல் அமைய வேண்டும் என்ற ஆசையும் அவரிடம் உள்ளதாம்.

இந்த நிலையில் வால்மீகி படத்தின் இசையமைப்பாளரே ராஜா என்பதால் சந்தோஷமடைந்த அவர் சமயம் பார்த்து இளையராஜாவிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். ராஜாவும் பார்ப்பதாக கூறினாராம். இதனால் படு குஷியாக காணப்படுகிறார் மீரா.

விரைவிலேயே எனக்கு ராஜா சாரிடமிருந்து அழைப்பு வரும் என்று நம்பிக்கையோடு கூறிக் கொண்டிருக்கிறாராம்.

ராகவேந்திரர் கோயில் திறக்கும் ரஜினி!


நடிகர்-நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ் கட்டியுள்ள புதிய ராகவேந்திரர் கோயிலை ரஜினிகாந்த் திறந்து வைக்கிறார்.

சென்னையை அடுத்த அம்பத்தூரில் பகவான் ராகவேந்திரருக்கு, பலரது நன்கொடை மூலம் ஒரு கோவிலைக் கட்டி வருகிறார் ராகவா லாரன்ஸ்.

நீண்ட நாட்களாக இக்கோவில் கட்டும் பணிகள் நடந்து வந்தன. தற்போது வேலை முடியும் தருவாயில் உள்ளது. இந்த கோவில் திறப்பு விழா ஆகஸ்டு மாதம் நடக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி இக்கோயிலைத் திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

அம்பத்தூரில் கட்டப்பட்டு வரும் ராகவேந்திரா கோவிலை ரஜினி சாரை வைத்துதான் திறக்க வேண்டும் என விரும்பினேன். இதுபற்றி அவரிடம் சொல்லி அழைத்தேன்.

என் அழைப்பை ரஜினி சாரும் உடனே ஏற்றுக் கொண்டார். ஆகஸ்ட் மாதம்தான் ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்த தினம் வருகிறது. அதே நாளில் திறப்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளேன். சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் வந்து திறக்கிறார், என்றார்.

ஏற்கெனவே ராகவா லாரன்ஸ் நடத்தும் ஆதரவற்ற குழந்தைகள் அறக்கட்டளைக்காக ரஜினி [^]யும், அவரது மகள் சௌந்தர்யா ரஜினியும் தொடர்ந்து உதவிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையத்தில் 12 மணிநேரம் தவித்த மீனாட்சி!


படப்பிடிப்பு முடிந்து மும்பை புறப்பட விமான நிலையம் சென்ற நடிகை மீனாட்சிக்கு டிக்கெட் எடுத்துத் தராமல் தயாரிப்பாளர் இழுத்தடித்ததால் 12 மணி நேரம் விமான நிலையத்திலேயே தவிப்புடன் காத்திருந்தார்.

'கருப்பசாமி குத்தகைதாரர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், மீனாட்சி. மும்பையைச் சேர்ந்த இவர் முதல் படத்தில் பாவாடை தாவணியில் வந்தார். இப்போது முழுமையான கவர்ச்சிக்கு மாறி கலக்க ஆரம்பித்துள்ளார்.

'த நா அல 4777,' 'ராஜாதிராஜா' ஆகிய படங்களில் கவர்ச்சி [^] வேடமேற்று நடித்துள்ளார்.

இப்போது, திருமலை இயக்கத்தில் 'அகம் புறம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு [^]க்கா சென்னை வந்த மீனாட்சி, படப்பிடிப்பு முடிந்து மீண்டும் மும்பை கிளம்பினார்.

அவருக்காக, காலை 9.30 மணி விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார் தயாரிப்பாளர். ஆனால் 30 நிமிடங்கள் தாமதமாக விமான நிலையத்தை வந்தடைந்தார். அதற்குள் விமானம் [^] புறப்பட்டுச் சென்று விட்டது.

அடுத்த விமானத்தில் டிக்கெட் போடும்படி எடுத்துத் தரும்படி இயக்குநர் [^] திருமலைக்கு போன் செய்து கேட்டார். அவரும் உடனே ஏற்பாடு செய்வதாக கூறினார். ஆனால், மீனாட்சி மும்பை செல்வதற்கு டிக்கெட் எடுக்கவே இல்லையாம். ஒவ்வொரு முறை விசாரிக்கும்போதும், தயாரிப்பாளர் தரப்பில் இழுத்தடிக்கப்பட்டதாம்.

மும்பை மீனாட்சியை சென்னையிலேயே இருக்க வைத்துவிட நினைத்தார் போலிருக்கிறது தயாரிப்பாளர்!.

காலை 10 மணிக்கு விமான நிலையம் [^] சென்ற மீனாட்சி, இரவு 10 மணி வரை விமான நிலையத்திலேயே காத்திருந்தாராம்.

ஒரு வழியாக 12 மணி நேரம் விமான டிக்கெட்டுக்காக காத்திருந்து தவித்த அவர் இரவு 11 மணி விமானத்தில் மும்பை போய் சேர்ந்தார்.

விமான நிலையத்தில் இருந்தவர்கள் மீனாட்சியை வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.

சன் டிவி அசத்தப் போவது யாரு புகழ் கோவை ரமேஷ் விபத்தில் பலி


விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு மூலம் அறிமுகமாகி, சன் டிவியின் அசத்தப் போவது யாரு மூலம் பிரபலமான கோவையைச் சேர்ந்த மிமிக்ரி கலைஞர் கோவை ரமேஷ் சாலை விபத்தில் பலியானார்.

கோவை ஒப்பணக்காரவீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் ரமேஷ்குமார் (40). கோவை ரமேஷ் என்ற பெயரில் சன் டிவியின் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். முன்பு விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் இவர்.

பெரும்பாலும் பெண் வேடத்தில்தான் இவர் வருவார். பல்வேறு பிரபல நடிகைகளின் குரலில் பேசுவது இவரது திறமை. குறிப்பாக சரோஜாதேவியைப் போலவே சிறப்பாக பேசி அனைவரையும் கவர்ந்தவர் ரமேஷ்.

கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த மாரப்பன் என்பவரின் மகன் கார்த்திகேயன் என்ற மோகன்குமார் (30). இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

கோவை ரமேஷ் தனக்குக் கிடைத்த புகழின் மூலம் பல்வேறு இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு வந்தார். இந்த நிலையில், அவரும், மோகன் குமாரும், திருவாரூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றனர்.

நிகழ்ச்சியை முடித்து விட்டு ரமேஷ்குமார், கார்த்திகேயன் மற்றும் அசோக் ஆகியோர் காரில் கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

திருச்சி வந்ததும் காரில் இருந்து அசோக் இறங்கி விட்டார். பின்னர் ரமேஷ், கார்த்திகேயன் இருவரும் கோவை நோக்கி வந்தனர்.

நேற்று காலை 6 மணி அளவில் அவர்கள் காங்கேயம்-முத்தூர் பிரிவு அருகே வந்து கொண்டு இருந்தனர். காரை கார்த்திகேயன் ஓட்டி வந்தார். அப்போது எதிரே வந்த லாரி, திடீரென்று கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த ரமேஷ், கார்த்திகேயன் இருவரும் உடல் நசுங்கி இறந்தனர்.

இடிபாடுகளில் சிக்கி இறந்த கோவை ரமேஷ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரது உடல்களை போலீஸார் மீட்டனர்.

லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வருகிறார் ராதிகா காந்தி!


காந்தி குடும்பத்துக்கும், ராதிகா காந்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் ராதிகாவுக்கும், சஞ்சனாவுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. இருவரும் அக்கா, தங்கை என்பதே அது.

கொக்கி மூலம் ஹீரோயினாக வந்தவர் சஞ்சனா. இப்போது தனது பெயரை பூஜா காந்தி என மாற்றிக் கொண்டு கன்னடத்தில் மகா பிசியாக இருப்பவர்.

இவரது தங்கைதான் ராதிகா காந்தி. இவரும் இப்போது நடிகையாகி விட்டார். இரு படங்களில் கன்னடத்தில் நடித்து விட்டார்.

2வது படத்தில் சினிமா செய்தியாளராக நடித்துள்ளாராம். தனது லட்சியம் தமிழுக்கு வருவதுதான் என்கிறார் ராதிகா.

இதுகுறித்து ராதிகா கூறுகையில், அக்கா மாதிரி பெரிய நடிகையாக வர வேண்டும். அதுதான் எனது லட்சியம், ஆசை. நிறைய தமிழ்ப் பட வாய்ப்புகள் வருகின்றன.

அக்கா கோலிவுட் போய் அங்கிருந்து கன்னடத்துக்கு வந்தாங்க. நான் கன்னடத்திலிருந்து கோலிவுட் போகப் போறேன் என்கிறார்.

எங்கிருந்து எங்கு போனால் என்ன, நல்லா நடிச்சா சரி..

ஜூன் 4ல் ஜெயம் ரவி -ஆர்த்தி திருமணம்!


பிரபல நடிகர் ஜெயம் ரவிக்கும் ஸ்காட்லாந்தில் எம்ஐஎம் பட்டம் பெற்ற ஆர்த்திக்கும் வரும் ஜூன் 4-ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது.

பிரபல படஅதிபர் எடிட்டர் மோகனின் மகன் ரவி. ஜெயம் என்ற பிரமாண்ட வெற்றிப் படம் மூலம் அறிமுகமாகி இப்போது முதல்நிலை நடிகர்களுள் ஒருவராகத் திகழ்கிறார்.

தொடர்ந்து வெற்றிப் படங்களைத் தந்துவரும் ஜெயம் ரவியின் அடுத்த வெளியீடு பேராண்மை திரைப்படம். எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இவருக்கும், சென்னையை சேர்ந்த விஜயகுமார்-சுஜாதா தம்பதியின் மகள் ஆர்த்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. ஆர்த்தி, சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். ஸ்காட்லாந்தில், 'இண்டஸ்ட்ரியல் மானேஜ்மெண்ட்'டில் (எம்.ஐ.எம்.) முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெறும் காதல் திருமணம் இது.

ஜுன் 4-ந் தேதி சென்னை அடையாரில் உள்ள பார்க் ஷெரட்டன் ஓட்டலில் காலை 7.30 மணியிலிருந்து 9 மணிக்குள் திருமணம் நடக்கிறது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி, ஜுன் 7-ந் தேதி மாலை 6.30 மணிக்கு, சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் மண்டபத்தில் நடக்கிறது.

தேனிலவு

திருமணம் பற்றி நடிகர் ஜெயம் ரவி நிருபர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

என்னைப் புரிந்து கொண்டவரே எனக்கு வாழ்க்கைத் துணையாக வரப்போகிறார்.

திருமணம் முடிந்ததும் இருவரும் தேன்நிலவுக்காக, ஆஸ்திரேலியா செல்ல முடிவு செய்து இருந்தோம். ஆனால், அங்கு இப்போது கலவரம் நடப்பதால், வேறு ஒரு வெளிநாட்டுக்கு செல்வது என்று திட்டமிட்டு இருக்கிறோம்.

திருமணம் செய்துகொண்டால் ஒரு நடிகரின் 'இமேஜ்' பாதிக்கப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் ரசிகர்கள் என் மீது மிகுந்த பாசம் கொண்டவர்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து அவர்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றார் ரவி.

Followers