Wednesday, July 15, 2009

எனக்கும் வேணும்!-ஜெனிலியா


கடந்த ஆண்டு பாலிவுட்டைக் கலக்கியவர் நடிகை ஜெனிலியாதான் . ஜானே து ய ஜானே நா படத்தின் மூலம் டாப் ஹீரோயின்களுள் ஒருவராகப் பார்க்கப்பட்டார்.

ஆனால் இந்த ஆண்டு அவர் நடித்த விளம்பரப் படங்கள் வரிசையாக வருகின்றனவே தவிர, புதிய இந்தி்ப் படம் ஒன்றும் வரும் வழியைக் காணோம். பெரிய பட்ஜெட் படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவும் இல்லை.

என்னாச்சு?

"ஒண்ணும் ஆகல... நான் பிஸியா நடிச்சிக்கிட்டிருக்கேன். இந்த வருஷம் மட்டும் என்னுடைய நான்கு பெரிய படங்கள் வரவிருக்கின்றன.

ஆனா எல்லா நடிகைகள் மாதிரி எனக்கும் யாராவது ஒரு கானுடன் (ஷாரூக்கான், சல்மான்கான், ஆமிர் கான், இம்ரான் கான்) நடிக்க ஆசையாக இருக்கிறது.

இவர்களுடன் ஒரு படத்தில் வந்தாலும் அடுத்த சில மாதங்களுக்கு பரபரப்பாக பேசப்படுவோம். திரையுலகில் அந்தஸ்தும் உயரும். இது எல்லாரும் அறிந்த உண்மை. ஆனால் என்ன செய்வது.... கதைகளுக்கு தேவையான நாயகன் யாரென்பதை இயக்குநர்தானே முடிவு செய்வார்?, என்கிறார் ஜெனிலியா.

இப்போதைக்கு பர்தீன் கானுடன் ஒரு படம் நடிக்க வாய்ப்பு வந்ததாம்... உடனே சம்மதம் சொல்லி நடிக்க ஆரம்பித்துவிட்டாராம்.

பறக்கிற கான்களுக்கு ஆசைப்படுவதை விட, கிடைத்த கானை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் போதும் என நினைத்துவிட்டார் போலிருக்கிறது!

0 comments:

Post a Comment

Followers