
நாடோடிகள் படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பில் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்த அபிநயாதான் இப்போது ரசிகர்களின் லேட்டஸ்ட் டாக்.
அபிநயாவுக்குத்தான் வாய் பேச முடியாதே தவிர, இவரைப் பற்றிய பேச்சுக்கள் எட்டு திசையும் ஒலிக்கின்றன. அபிநயா கேட்டும் திறன் இழந்தவராக இருக்கிறாரே தவிர, யாரைப் பார்த்தாலும் இவரைப் பற்றித்தான் கேட்கிறார்கள்.
பேட்டிக்காக பத்திரிக்கை அலுவலகங்கள், சேனல்களிலிருந்து ஒரு நாளில் 10 தடவையாவது போன் வந்துவிடுகிறது இவரது வீட்டிற்கு. குறுஞ்செய்தி வாழ்த்துக்கள், இணையதள இதழ்களில் அபிநயாவின் படங்களும் செய்திகளும் ஊர்வலமாய்...
இப்படி நாலாபக்கமும் அநியாயத்துக்கு நல்ல பெயர் வாங்கியுள்ள அபிநயாவுக்கு நாடோடிகள் டீமான, சமுத்திரக்கனி, சகிச்குமார் அனைவரும் சொல்லியிருக்கும் ஒரே அட்வைஸ், எல்லா படத்தையும் ஒத்துக்காதே, நல்ல படமா, குறைந்த வசனம், நிறைய நடிக்க ஸ்கோப் உள்ள படமா தேர்ந்தெடுத்து நடி என்பதே ஆகும்.
வாழ்த்துக்கள் அபி.

0 comments:
Post a Comment