
எனது மனதில் இப்போது திருமணம் என்ற எண்ணமே இல்லை. நான் படித்துக் கொண்டிருக்கிறேன். அதை விட முக்கியமான ஒரு லட்சியம் எனது மனதில் உள்ளது. அதை முடித்த பின்னர் தான் திருமணம் என்கிறார் நவ்யா நாயர்.
சில நடிகைகள் குறித்து திடீரென உறுதியான வதந்தி பரவும். அதாவது அவர்கள் காதலிக்கிறார்கள் என்று அந்த வதந்தி இருக்கும், அல்லது திருமணம் செய்யப் போகிறார்கள் என்று செய்தி கிளம்பும்.
இதில் 2வது ரகத்தில் சேர்த்தி நவ்யா. இனி நடிக்க மாட்டார். கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார், தீவிரமாக காதலித்து வந்தவரையே மணக்கப் போகிறார் என்பதுதான் அந்த செய்தி.
இந்த சேதி உண்மையா சேச்சி என்று நவ்யாவிடம் கேட்டால், அதெல்லாம் சத்தியமாக கிடையாது. அப்படி ஒரு திட்டமே இல்லை. கல்யாணப் பேச்சு நடந்ததாக கூறப்படுவதெல்லாம் டூப் என்கிறார் நவ்யா.
தொடர்ந்து அவர் கூறுகையில், இப்போது நான் எம்.பி.ஏ படித்து வருகிறேன். அதை முடிக்க வேண்டும். பிறகு ஒரு லட்சியம் வைத்துள்ளேன். அதுவும் நிறைவேற வேண்டும். அது என்ன என்பதை சொல்ல மாட்டேன்.
இதெல்லாம் முடிந்த பிறகுதான் மற்றவையெல்லாம். அதுவரை திருமணம் கிடையாது என்கிறார் தனது டிரேட் மார்க் புன்னகையுடன்.
நவ்யா மனசுக்குள் அப்படி என்ன பரம ரகசிய லட்சியம் இருக்கும்...??

0 comments:
Post a Comment