
நெடுந்தூர பயணத்தில் வழித்துணையாக காற்றும், கவிதை போல ஒரு பெண்ணும் வந்தால் எப்படியிருக்கும்? அவளே வாழ்க்கை துணையாகவும் வந்தால்...
இதுதான் பையா படத்தின் கதை என்கிறார் லிங்குசாமி. பிரேக் டவுன் ஆகாத பஸ்சை போல தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த லிங்குவை பீமா ஒரு பிரேக் அடித்து நிறுத்தியது. அதன்பின் முன்னிலும் வேகமாக ஓட்டமெடுத்திருக்கிறார் இவர். என்னை தோல்வி சீண்டும்போதுதான் வெற்றியை நோக்கி ஒரு வெறி வரும். இப்போது அது எனக்கு வந்திருக்கு என்கிறார் லிங்கு.
பைய என்றால் மெல்ல என்று அர்த்தம். பையா என்ற இளமையான துறுதுறுப்பானவன் என்று அர்த்தம். மனசுக்குள் மெல்ல நுழைந்து கனமாக இடம் பிடிக்கும் கதைதான் இது என்று பூடகமாகவே பேசுகிற லிங்குசாமி, அவசரமோ ஆர்ப்பாட்டமோ இல்லாமல் ஷ§ட்டிங்கை நடத்தி வருகிறார். காரணம், முழு ஸ்கிரிப்டையும் அச்சடித்து அதன்படியே எடுத்து வருவதால்தான்!
காதலின் தீராத பக்கங்களில் எதையெதையோ, யார் யாரோ எழுதினாலும், லிங்குசாமியின் பேனாவுக்கும் காதலுக்கும் ஒரு இளமையான நெருக்கம் இருக்கும். இதை அவரது முந்தைய படங்கள் தனித்துவமாக நிருபித்திருக்கின்றன. இந்த படத்தில் அது கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்கும் என்கிறார்கள். சாக்லெட்டுக்கு உறை போடாமலே கொடுத்தால் இன்னும் சவுகர்யம்தானே?

0 comments:
Post a Comment