
பசங்க படத்தில் கலக்கலான சோபிக் கண்ணு கேரக்டரில் நடித்த வேகா, இயக்குநராகும் ஆசையில் மும்முரமாக தன்னைத் தயார்படுத்தி வருகிறார்.
இயக்குநர் சசிக்குமாரின் தயாரிப்பில், பாண்டிராஜின் யதார்த்தமான இயக்கத்தில் குட்டிப் பசங்களின் லூட்டியுடன் வெளியான பசங்க படத்தில் நாயகியாக நடித்தவர்தான வேகா.
சோபிக்கண்ணு என்ற கேரக்டரில் கலக்கலாக நடித்திருந்தார் வேகா. அதிலும் அவர் புருவத்தை அங்கிட்டும், இங்கிட்டும் ஏற்றி இறக்கிக் காட்டிய ஸ்டைலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு.
நடிகையாக அறிமுகமானாலும் கூட வேகாவின் மனதுக்குள் இயக்குநராகும் ஆசை தீராத தாகமாக இருக்கிறதாம். இதனால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கதையை ரெடி செய்து கொண்டிருக்கிறாராம்.
சரியான சந்தர்ப்பம் வாய்க்கும் போது இயக்குநராகி விடுவேன் என்கிறார் தனது டிரேட் மார்க் அகலச் சிரிப்புடன்.
சோபிக்கண்ணுக்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து நிறையப் படங்கள் வருகிறதாம். இருந்தாலும் தனக்குப் பொருத்தமான கேரக்டராக இருந்தால்தான் நடிப்பாராம். அவசரப்பட்டு அள்ளிப் போட்டுக் கொள்ள அவர் விரும்பவில்லையாம்.

0 comments:
Post a Comment