
சமுத்திரக்கனியின் நாடோடிகள் திரைப்படம் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
நூற்றில் ஒரு படம்தான் படமாகவும் கற்றுக்கொள்ள பாடமாகவும் இருக்கும். சமுத்திரக்கனியின் நாடோடிகள் அந்தவகை. தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படம், தரமணியிலுள்ள ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இந்த நிகழ்வின் போது சமுத்திரக்கனி, படத்தின் ஒளிப்பதிவாளர் கதிர், எடிட்டர் ஏஎல் ரமேஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.
திரையிடலுக்குப் பின் மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு மூவரும் பதிலளித்தனர். அபூர்வமாகவே இதுபோன்ற கலந்துரையாடல் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடைபெறும். நாடோடிகள் அதனை சாதித்திருப்பதும் ஒருவகையில் சாதனைதான்.
இந்த கலந்துரையாடலில் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment